மேலும் அறிய

Tamilisai Soundarrajan: ஆளுநர் உரையில் தெலுங்கில் கவிதை சொன்ன தமிழிசை! - கைதட்டலால் அதிர்ந்த அரங்கம்!

தமிழ்நாடு பாஜக தலைவராகவும், மாநில அரசியலில் ஆளுமைமிக்க பெண்ணாகவும் விளங்கியவர் தமிழிசை சௌந்தரராஜன். அவர் 2019 ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தெலங்கானா ஆளுநர் உரையின்போது ஆளுநர் தமிழிசை கூறிய தெலுங்கு கவிதை வரிகள் அரங்கத்தை கைதட்டலால் அதிர வைத்தது. 

தமிழ்நாடு பாஜக தலைவராகவும், மாநில அரசியலில் ஆளுமைமிக்க பெண்ணாகவும் விளங்கியவர் தமிழிசை சௌந்தரராஜன். தன்னை எவ்வளவு ட்ரோல் செய்தாலும் தன்னுடைய செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுத்து வந்த அவர் 2019 ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பேற்றார். 

என்னதான் இரண்டு மாநிலங்களை கவனித்து வந்தாலும் தமிழிசையை தமிழ்நாட்டில் அடிக்கடி தனியார் நிகழ்ச்சிகளிலும் காண முடியும். மேலும் தெலங்கானா  மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது.  இப்படியான நிலையில் கடந்த மாதம் தெலங்கனாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஏ ரேவந்த் ரெட்டி மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார். கடந்த வாரம் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஒருவாரத்தில் ரேவந்த் தனது செயல்பாடு மற்றும் மக்களை அணுகும் முறையில் கேசிஆரிடம் இருந்து வேறுபட்டு புதிய பாணியை கையாண்டு வருகிறார். சந்திரசேகர ராவ் போல இல்லாமல் புதிய முதலமைச்சர் கே.ரேவந்த் ரெட்டி மற்றும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே சுமூகமான உறவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சட்டப்பேரவையில் உரையாற்றினார். தனது உரையின்போது இடையில் தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கில் கவிதை ஒன்றை வாசித்தார். இதைக்கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி அரங்கத்தை அதிர செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க: Livingston: “கிறிஸ்தவராக இருந்து போர் அடித்து விட்டது” - மதம் மாறியது குறித்து நடிகர் லிவிங்ஸ்டன் பேசிய வீடியோ வைரல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Embed widget