மேலும் அறிய

அய்யா! எங்களுக்கும் ஓய்வூதியம் தாங்க..! வழுக்கையால் பாதிக்கப்பட்டவர் விடுத்த விநோத கோரிக்கை..!

மாற்றுத்திறனாளிகள், ஒற்றை பெண்கள், முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதுபோல தங்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தெலுங்கானாவில் வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

இந்த தலைமுறையினர் மிகப்பெரிய பிரச்சனையாக பார்ப்பது முடி உதிர்வை தான். உணவு, பழக்க வழக்கம், குடும்ப வாரிசு போன்ற காரணங்கள் பலருக்கு இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனை தொடங்கி இறுதியாக வழுக்கையில் போய் நிற்கிறது. எல்லாவற்றைய பாதுகாக்கும் திறன் கொண்டவரால் கூட தன்னுடைய தலையில் இருக்கும் முடியை பாதுகாக்க முடியவில்லை. இதனாலேயே பலருக்கு தன்னம்பிக்கை இழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கென லட்சக்கணக்கில் செலவு செய்து பயனில்லை என பலர் புலம்பி நாம் கேட்டிருப்போம்.

இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள், ஒற்றை பெண்கள், முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதுபோல தங்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தெலுங்கானாவில் வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வழுக்கையால் பாதிக்கப்பட்டோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

சித்திப்பேட்டை மாவட்டம், கோஹேடா மண்டலம் தங்கல்லப்பள்ளி கிராமத்தில் உள்ள ரேணுகா எல்லம்மா கோவிலில் வழுக்கையால் பாதிக்கப்பட்டோர் சங்கம் ஒன்று புதிதாக கூட்டப்பட்டது. இந்த சங்கத்திற்கு புதிய செயற்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வழுக்கையால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் முதல் தலைவராக வேல்டி பாலையா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக ராஜேஷமும், பொருளாளராக மவுதம் ராமுவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனிடையே, வழுக்கை பாதிக்கப்பட்டோர் சங்கத் தலைவர் வேல்டி பாலய்யா, ”வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சமூகத்தில் நிறைய அவமானங்களைச் சந்தித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சங்கராந்தி பண்டிகைக்கு முன்னதாக ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட சங்கம் அமைத்து பெரிய அளவில் இயக்கம் நடத்தப்படும். மேலும், பிரகதி பவனை முற்றுகையிடுவோம்” என எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இப்போதெல்லாம் இந்த வழுக்கை பிரச்சனை எல்லோருக்கும் வந்து கொண்டிருக்கிறது. 35 வயதிற்கு மேற்பட்ட பலர் உணவு அல்லது வாழ்க்கை முறை மாற்றத்தால் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் கூட வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். முடி உதிர்தல் பிரச்சனையாக ஆரம்பித்து படிப்படியாக வழுக்கையாக மாறி அவர்களின் நம்பிக்கை குலைகிறது. முடி இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அழகில்லாமல் தோற்றமளிக்கும் போது தாழ்வு மனப்பான்மை தொடங்குகிறது. இந்தப் பிரச்சனை மெல்ல மெல்ல தன்னம்பிக்கையை சிதைக்கிறது. சொல்லப்போனால், இதுவும் ஒரு உளவியல் பிரச்சனையாக மாறுகிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் தான் நாங்கள் அனைவரும் வழுக்கை பாதிக்கப்பட்டவர்களின் சங்கத்தை உருவாக்கினோம். இந்த ஓய்வூதியத் தீர்மானம் சாதாரணமாக எடுக்கப்பட்டதல்ல, மிகுந்த யோசனைக்குப் பிறகு இந்தக் கோரிக்கை விடப்பட்டது” என்றும் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget