மேலும் அறிய

அய்யா! எங்களுக்கும் ஓய்வூதியம் தாங்க..! வழுக்கையால் பாதிக்கப்பட்டவர் விடுத்த விநோத கோரிக்கை..!

மாற்றுத்திறனாளிகள், ஒற்றை பெண்கள், முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதுபோல தங்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தெலுங்கானாவில் வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

இந்த தலைமுறையினர் மிகப்பெரிய பிரச்சனையாக பார்ப்பது முடி உதிர்வை தான். உணவு, பழக்க வழக்கம், குடும்ப வாரிசு போன்ற காரணங்கள் பலருக்கு இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனை தொடங்கி இறுதியாக வழுக்கையில் போய் நிற்கிறது. எல்லாவற்றைய பாதுகாக்கும் திறன் கொண்டவரால் கூட தன்னுடைய தலையில் இருக்கும் முடியை பாதுகாக்க முடியவில்லை. இதனாலேயே பலருக்கு தன்னம்பிக்கை இழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கென லட்சக்கணக்கில் செலவு செய்து பயனில்லை என பலர் புலம்பி நாம் கேட்டிருப்போம்.

இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள், ஒற்றை பெண்கள், முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதுபோல தங்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தெலுங்கானாவில் வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வழுக்கையால் பாதிக்கப்பட்டோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

சித்திப்பேட்டை மாவட்டம், கோஹேடா மண்டலம் தங்கல்லப்பள்ளி கிராமத்தில் உள்ள ரேணுகா எல்லம்மா கோவிலில் வழுக்கையால் பாதிக்கப்பட்டோர் சங்கம் ஒன்று புதிதாக கூட்டப்பட்டது. இந்த சங்கத்திற்கு புதிய செயற்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வழுக்கையால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் முதல் தலைவராக வேல்டி பாலையா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக ராஜேஷமும், பொருளாளராக மவுதம் ராமுவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனிடையே, வழுக்கை பாதிக்கப்பட்டோர் சங்கத் தலைவர் வேல்டி பாலய்யா, ”வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சமூகத்தில் நிறைய அவமானங்களைச் சந்தித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சங்கராந்தி பண்டிகைக்கு முன்னதாக ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட சங்கம் அமைத்து பெரிய அளவில் இயக்கம் நடத்தப்படும். மேலும், பிரகதி பவனை முற்றுகையிடுவோம்” என எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இப்போதெல்லாம் இந்த வழுக்கை பிரச்சனை எல்லோருக்கும் வந்து கொண்டிருக்கிறது. 35 வயதிற்கு மேற்பட்ட பலர் உணவு அல்லது வாழ்க்கை முறை மாற்றத்தால் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் கூட வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். முடி உதிர்தல் பிரச்சனையாக ஆரம்பித்து படிப்படியாக வழுக்கையாக மாறி அவர்களின் நம்பிக்கை குலைகிறது. முடி இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அழகில்லாமல் தோற்றமளிக்கும் போது தாழ்வு மனப்பான்மை தொடங்குகிறது. இந்தப் பிரச்சனை மெல்ல மெல்ல தன்னம்பிக்கையை சிதைக்கிறது. சொல்லப்போனால், இதுவும் ஒரு உளவியல் பிரச்சனையாக மாறுகிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் தான் நாங்கள் அனைவரும் வழுக்கை பாதிக்கப்பட்டவர்களின் சங்கத்தை உருவாக்கினோம். இந்த ஓய்வூதியத் தீர்மானம் சாதாரணமாக எடுக்கப்பட்டதல்ல, மிகுந்த யோசனைக்குப் பிறகு இந்தக் கோரிக்கை விடப்பட்டது” என்றும் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Food Poisonning: பிறந்தநாள் கேக் உண்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு, தீவிர சிகிச்சையில் பெற்றோர் - பெங்களூருவில்  விபரீதம்
Food Poisonning: பிறந்தநாள் கேக் உண்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு, தீவிர சிகிச்சையில் பெற்றோர் - பெங்களூருவில் விபரீதம்
TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Nalla Neram Today Oct 22: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Manadu : கார் பார்கிங்கில் தேங்கிய மழைநீர்!அடாவடி செய்யும் பவுன்சர்கள் நடக்குமா தவெக மாநாடு?Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Food Poisonning: பிறந்தநாள் கேக் உண்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு, தீவிர சிகிச்சையில் பெற்றோர் - பெங்களூருவில்  விபரீதம்
Food Poisonning: பிறந்தநாள் கேக் உண்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு, தீவிர சிகிச்சையில் பெற்றோர் - பெங்களூருவில் விபரீதம்
TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Nalla Neram Today Oct 22: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
RasiPalan Today: மகரத்துக்கு அனுசரிப்பு; தனுசுக்கு நன்மை: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
RasiPalan Today: மகரத்துக்கு அனுசரிப்பு; தனுசுக்கு நன்மை: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்”  - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Embed widget