மேலும் அறிய

TCS : 20,000 புதியவர்களுக்கு வேலை...பணி சலுகை அளிக்கப்பட்ட அனைவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்...டிசிஎஸ் தகவல்

இந்தியாவின் மிக பெரிய ஐடி நிறுவனமான tata consultancy services (டிசிஎஸ்), 2022-23 நிதியாண்டில் 35 ஆயிரம் முன் அனுபவம் இல்லாத புதியவர்களை பணியில் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கல்லூரி படித்துவிட்டு ஐடி நிறுவனங்களில் சேர்வதுதான் பெரும்பாலான மாணவர்களின் கனவாக உள்ளது. இதில், முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு பணி தர மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வான பின்னரும், பணி கடிதம் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் சில சமயங்களில் நிறுவனங்கள் மீண்டும் அழைப்பதே இல்லை என்று கூட குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் மிக பெரிய ஐடி நிறுவனமான tata consultancy services (டிசிஎஸ்), 2022-23 நிதியாண்டில் 35 ஆயிரம் முன் அனுபவம் இல்லாத புதியவர்களை பணியில் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. அக்டோபர் 10ஆம் தேதியான இன்று வெளியிடப்பட்டுள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவறிக்கையில் இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியில் சேர்ந்தவர்களில் 20 ஆயிரம் புதியவர்கள் இரண்டாவது காலாண்டிலேயே சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பிடுகையில், நிறுவனம் 2022 நிதியாண்டின் முதல் பாதியில் 43,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. முழு வருடத்தில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

2023 நிதியாண்டில் மேலும் 10-12,000 புதியவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மூன்றாம் காலாண்டிற்குப் பிறகு புதிதாக பணியமர்த்துவதற்கான அதன் புதிய இலக்குகளை முடிவு செய்யப்பட உள்ளது. 2022 நிதியாண்டின் இறுதியில் 2023 நிதியாண்டுக்கு 40,000 புதிய பணியமர்த்தல் இலக்கை டிசிஎஸ் அறிவித்துள்ளது.

இந்த காலாண்டில் நிறுவனத்தில் கூடுதலாக 9,840 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பணியாளர்களின் எண்ணிக்கை 6,16,171 ஆக உள்ளது. இது கடந்த காலாண்டில் இருந்து சரிவாகும். அப்போது, நிறுவனத்தின் கூடுதலாக 14,136 பேர் பணியமர்த்தப்பட்டனர். கடந்த ஆண்டு இதே காலாண்டில், டிசிஎஸ் நிறுவனத்தின் 19,690 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த நிதியாண்டில் மூன்றாவது காலாண்டில் 28,238 பேரும் நான்காவது காலாண்டில் 35,209 பேரும் பணியமர்த்தப்பட்டனர். இதனால், பணியமர்த்தல் கணிசமாக அதிகரித்திருந்தாலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 14,136 என கணிசமாகக் குறைந்துள்ளது.

பணி சலுகை அளிக்கப்பட்ட அனைவரையும் பணியமர்த்தியுள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்துன் தலைமை மனிதவள அலுவலர் மிலிந்த் லக்காட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "திறன் மேம்பாடு மற்றும் கரிம திறமை மேம்பாடு ஆகியவற்றில் எங்களின் முதலீடுகள், இந்த காலாண்டில் எங்கள் வணிகத்தை கணிசமாக வளர்க்க அனுமதித்துள்ளது. 

காலாண்டு வருடாந்திர தேக்கம் இரண்டாம் காலாண்டில் உச்சத்தை எட்டியுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் இழப்பீட்டு எதிர்பார்ப்புகள் மிதமானதாக இருக்கும் அதே வேளையில், இந்த புள்ளியில் இருந்து இது குறைவதைப் பார்க்க வேண்டும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget