Tamil Nadu tableau : குடியரசுதின விழா: தமிழ்நாடு அலங்கார ஊர்திகளை தேர்வு செய்த மத்திய அரசு!
டெல்லியில் இந்தாண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளது.

டெல்லியில் இந்தாண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளது.
இந்தாண்டு குடியரசு தின ஊர்வலத்திற்கு தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களில் அலங்கார ஊர்திகளை மத்திய அரசு தேர்தெடுத்துள்ளது. கடந்தாண்டு தமிழகத்தின் ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு பங்கேற்கும்.
இந்த ஆண்டு குடியரசு தின ஊர்லத்தில் பங்கேற்பவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அலங்கார ஊர்திகளை அமைக்கும் பணியை தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் பகுதியில் இதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், குஜாரத், ஹரியானா, ஜார்காண்ட், கேரளா, லடாக், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட்,மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஊர்வலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 19 -ஆம் தேதிக்குள் அலங்கார ஊர்திகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஒத்திகை 23- ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
PONGAL GIFT: மக்களே தயாரா? வீடுகளை தேடி வரத் தொடங்கியது பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்..!
Before You Go
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















