மேலும் அறிய

Suresh Gopi | இது 20 வருட பாசம்.. சுரேஷ் கோபியை கட்டியணைத்து கதறி அழுத இளம்பெண் - நெகிழ்ச்சி கதை!

20 வருடங்களுக்கு முன்பு, சுரேஷ் கோபியால் காப்பாற்றப்பட்டவர், இன்று அவரை சந்தித்து கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காடு மாவட்டத்தில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. அதனை உயிருடன் கண்டுபிடித்த பிச்சை எடுக்கும் கும்பல், அக்குழந்தையை வைத்து தங்கள் தொழிலை நடத்தத் தொடங்கினர். ஆனால் இந்த விவகாரம் சமூக ஆர்வலர்களுக்கு தெரியவரவே அந்தக் குழந்தை மீட்கப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் செய்தியாய் பரவ, நடிகர் சுரேஷ் கோபி அந்தக் குழந்தையை சந்தித்து தன்னுடைய ஆதரவையும், உதவிகளையும் செய்தார். பின்னர் நாட்கள் கடந்தோடியது. இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்தக் குழந்தை குறித்து சுரேஷ் கோபிக்கு தகவல் கிடைத்துள்ளது. பாலக்காட்டுக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற சுரேஷ் கோபியிடம், நீங்கள் ஆதரவு கொடுத்த அந்த பெண் குழந்தை தற்போது குடும்பத் தலைவியாக இங்குதான் வசிப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த சுரேஷ் கோபி அவரது வீட்டுக்குச் சென்றார்.


Suresh Gopi | இது 20 வருட பாசம்.. சுரேஷ் கோபியை கட்டியணைத்து கதறி அழுத இளம்பெண் - நெகிழ்ச்சி கதை!

அன்று சிறுமியாக இருந்தவர் இன்று ஒரு குடும்பத் தலைவியாக உள்ளார். சதீஷ் என்பவரின் மனைவியாக இருக்கும் ஸ்ரீதேவிக்கு ஷிவானி என்ற மகளும் உள்ளார். பாலக்காட்டில் சிறிய வீட்டில் வசித்து வரும் ஸ்ரீதேவி வளையல் கடை நடத்தி வருகிறார்.

தன்னை மீட்டெடுத்து காப்பாற்றிய சுரேஷ் கோபி தன்னை சந்திக்க வருவதை அறிந்த ஸ்ரீதேவி மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். வீட்டுக்கு வந்த சுரேஷ் கோபியை கட்டியணைத்து கதறி அழுதுள்ளார் ஸ்ரீதேவி. இது பார்ப்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வெறுங்கையோடு போகாமல் கையில் ஸ்வீட்டுடன் சென்ற சுரேஷ் கோபி ஸ்ரீதேவியுடனும், அவரது கணவர் மற்றும் மகளுடன் அமர்ந்து பேசினார். பின்னர் காரில் ஏறி புறப்பட்ட சுரேஷ் கோபியை பிரிய மனமின்றி கையசைத்து அனுப்பி வைத்துள்ளது ஸ்ரீதேவியின் குடும்பம். ஒரு அழகான இந்த சந்திப்பை பலரும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.


Suresh Gopi | இது 20 வருட பாசம்.. சுரேஷ் கோபியை கட்டியணைத்து கதறி அழுத இளம்பெண் - நெகிழ்ச்சி கதை!

முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு சுரேஷ் கோபி சர்ச்சையில் சிக்கினார். ஜீப்பில் சென்றபோது ஒல்லூர் காவல் துணை ஆய்வாளரைப் பார்த்து தனக்கு சல்யூட் அடிக்கச் சொன்னதாக சர்ச்சை எழுந்தது. அப்போது சுரேஷ் கோபி, நான் எம்.பி. எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சல்யூட் அடியுங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இது குறித்து சுரேஷ் கோபி மாத்ருபூமி செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "கேரள அரசு எம்.பி.களுக்கு சல்யூட் அடிக்கக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தால், அந்த உத்தரவை முதலில் ராஜ்யசபா சேர்மனுக்கு அனுப்ப வேண்டும். பின்னர் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்து கேரளாவில் அப்படி ஏதும் உத்தரவில்லை என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget