மேலும் அறிய

Article 370 : 370 சட்டப்பிரிவு செல்லுமா? ஜம்மு காஷ்மீர் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்..

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ஜம்மு காஷ்மீர் வழக்கின் தீர்ப்பு இன்று (டிசம்பர் 11) வெளியாக உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

ஜம்மு காஷ்மீர் வழக்கு:

இதன் மீதான விசாரணை, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கும் மனுதாரர் தரப்புக்கும் இடையே பரபர வாதம் நடைபெற்றது. இரு தரப்பு வாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள வழக்கின் தீர்ப்பு இன்று (டிசம்பர் 11) வெளியாக உள்ளது. அரசியலமைப்பு வகுத்த சட்ட விதிகளின்படி, சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியதா? அல்லது சட்ட விரோதமாக நீக்கப்பட்டதா? என்பது குறித்து தீர்ப்பில் தெரிவிக்கப்பட உள்ளது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தவே, ராஜீவ் தவான் உள்ளிட்ட 18 வழக்கறிஞர்கள் வாதிட்டனர். சட்ட விதிகளுக்கு உட்பட்டே சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டவர்கள் வாதம் மேற்கொண்டனர்.

மத்திய அரசின் வாதம்:

ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டதன் விளைவாக அதன் சட்டப் பேரவை உருவாக்கப்பட்டது என மத்திய அரசு வாதிட்டது. ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்துபோது, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தற்காலிகமாக செயல்படாமல் இருந்தது. இதன் மூலம், நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்க மத்திய அரசுக்கு அதிகாரம் பெற்றுள்ளதாக வாதிடப்பட்டது.

அரசியலமைப்பின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சி தத்துவத்தை மீறவில்லை என்றும் வாதம் மேற்கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பு வாதம்:

மாநிலத்தின் உரிமைகளையும் அரசியலமைப்பின்படி உருவாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் உரிமைகளையும் மத்திய அரசு தன்னிச்சையாக மீறியுள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது. மாநிலத்தைப் பிரிக்கும் முன், சட்டப்பேரவையில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவது அடிப்படைத் தேவை என்றும் வாதிடப்பட்டது. இந்த முக்கியமான நடவடிக்கையை புறக்கணித்ததன் மூலம், மாநிலத்தின் சுயாட்சியை மத்திய அரசு ஆக்கிரமித்துள்ளது. மத்திய-மாநில உறவுகளின் அடிப்படைக் கொள்கைகளை மட்டுப்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget