மேலும் அறிய

குழந்தை பாலியல் வன்கொடுமை - மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த உச்ச நீதிமன்றம்!

கடந்த 2013ஆம் ஆண்டு நான்கு வயது பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

`சமூகத்திற்குப் பயனுள்ள நபராக மாறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்று கூறி, கடந்த 2013ஆம் ஆண்டு நான்கு வயது பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யூ.யூ.லலித், எஸ்.ரவிந்திர பட், பெலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கொலை வழக்கில் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவும், பாலியல் வன்கொடுமை வழக்கில் அளிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகவும் குறைத்துள்ளது. 

`நீதியை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற அடிப்படைகளை மேம்படுத்தி வரும் இந்த நீதிமன்றம், குற்றவாளிகள் தங்களால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யவும், சமூகத்திற்குப் பயனுள்ள நபராகவும் சிறையில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காகவும் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது’ எனவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குழந்தை பாலியல் வன்கொடுமை - மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த உச்ச நீதிமன்றம்!

கடந்த ஏப்ரல் 19 அன்று வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்ற ஆணையில், `குற்றவாளியின் குறைபாடுடைய உளவியலை மீண்டு சரிசெய்வதற்கு எப்போதுமே மரண தண்டனை பயன்படாது’ எனச் சுட்டிக்காட்டி இருந்தது. 

மேலும் இந்த ஆணையில், `இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே அந்தச் சிறுமி இந்தக் குற்றவாளியால் அழிக்கப்பட்டிருக்கிறார். மனிதர்களுள் மிகவும் கொடூரமான சம்பவங்களுள் ஒன்று இங்கே நிகழ்ந்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளி மீது காட்டப்படும் எந்தவொரு இரக்கமும் நீதியைச் சரிவர தெரிவிக்காததாக மாறிவிடும். இதுபோன்ற வழக்குகளை அபூர்வமானவையாக இந்த நீதிமன்றம் கருதியதில்லை’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய போது, உச்ச நீதிமன்றம் பிரபல ஆங்கிலக் கவிஞரான ஆஸ்கர் வைல்ட் எழுதிய பிரபல வாசகமான, `சந்நியாசிக்கும், பாவிக்கும் இடையிலான வேறுபாடு என்பது, ஒவ்வொரு சந்நியாசிக்கும் கடந்த காலம் இருக்கும்; ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் இருக்கும் என்பதே’ என்பதைக் குறிப்பிட்டிருந்தது. 

குழந்தை பாலியல் வன்கொடுமை - மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த உச்ச நீதிமன்றம்!

கடந்த 2013ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் முகமது ஃபிரோஸ் என்பவர் நான்கு வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, வயலில் தூக்கி எறிந்துள்ளார். மறுநாள் காலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அவரைக் கண்டெடுத்து ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டும், சிகிச்சை பலனின்றி இந்தச் சிறுமி உயிரிழந்தார். 

இந்த வழக்கின் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல், நாடு முழுவதும் சுமார் 5 வழக்குகளில் இதே போன்று பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மரண தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாக நீதிமன்றங்கள் குறைத்து தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget