மேலும் அறிய

`இந்து ராஷ்ட்ரம் அமைப்பதாக வெறுப்புப் பேச்சு!’ - சர்ச்சை நிகழ்ச்சி மீதான விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

டெல்லி தல்கோடோரா அரங்கத்தில் `இந்து ராஷ்ட்ரம்’ அமைப்பதாகக் கூறி நடத்தப்படவுள்ள நிகழ்ச்சிக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் வரும் மே 9 அன்று விசாரணை செய்யும் எனத் தெரிவித்துள்ளது. 

டெல்லி தல்கோடோரா அரங்கத்தில் `இந்து ராஷ்ட்ரம்’ அமைப்பதாகக் கூறி நடத்தப்படவுள்ள நிகழ்ச்சிக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் வரும் மே 9 அன்று விசாரணை செய்யும் எனத் தெரிவித்துள்ளது. 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அபய் ஒகா, சி.டி.ரவிகுமார் அடங்கிய அமர்வு இந்த  வழக்கை விசாரணை செய்துள்ளது. இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சி கடந்த மே 5 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனைத் தடை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, மனுதாரரிடம் காவல்துறையினரிடம் இந்த உத்தரவின் ஆணைகளை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ல நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிஷலனந்தா சரஸ்வதி என்ற சாமியார் பல்வேறு வெறுப்புப் பேச்சுகளை ஏற்கனவே சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசியவர். தொடர்ந்து தடை கோரப்பட்டும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் பொதுவெளியில் நடைபெறுவதாகவும், இவற்றைத் தடுக்கவோ, இவற்றில் பேசுவதைக் கண்டித்தோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த மனு, இந்த வெறுப்புப் பேச்சுகளால் நாட்டில் வாழும் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுவதையும் தெரிவித்துள்ளது. 

`இந்து ராஷ்ட்ரம் அமைப்பதாக வெறுப்புப் பேச்சு!’ - சர்ச்சை நிகழ்ச்சி மீதான விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!
நிஷலனந்தா சரஸ்வதி

இந்த மனுவில், `டெல்லியின் தல்கடோரா அரங்கத்தில் மே 5 அன்று மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதாக மனுதாரர்களுக்குத் தெரிய வந்துள்ளது. அதில் பூரியின் சங்கராச்சாரியும், ஸ்ரீ கோவர்தன் மடத்தின் மஹந்த்துமான நிஷலனந்தா சரஸ்வதி கலந்து கொள்வார் எனவும் சுதர்ஷன் செய்தி சேனல் வெளியிட்டுள்ள இணைய தளப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் போஸ்டரில் இந்த நிகழ்ச்சியின் போது பகிரங்கமாக இந்தியா இந்து ராஷ்ட்ரம் என அறிவிக்கப்பட்டு, அவ்வாறு மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. சுதர்ஷன் செய்தி சேனலின் சுரேஷ் சாவன்கே என்பவர் இந்துக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள வீடியோ இணைய தளங்களில் உள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது. 

`இந்து ராஷ்ட்ரம் அமைப்பதாக வெறுப்புப் பேச்சு!’ - சர்ச்சை நிகழ்ச்சி மீதான விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!
நிஷலனந்தா சரஸ்வதி

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சு நிகழ்ச்சிகள் குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தனது அதிருப்திகளை வெளிப்படுத்தியதோடு அரசு தரப்பில் இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. வெறுப்புப் பேச்சுக்கான நிகழ்ச்சியை எதிர்த்து பத்திரிகையாளர் குர்பான் அலி, பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மூத்த வழக்கறிஞருமான அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருப்பதோடு, முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சுகளைச் சுதந்திரமாகவும், நம்பிக்கை கொள்ளும் வகையிலும், நடுநிலையான வகையில் விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வு பிரிவு அமைக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இரு சமூகங்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்துதல், தேசிய ஒருமைப்பாட்டை சிதைத்தல், பொது அமைதிக்குக் களங்கம் விளைவித்தல் முதலான பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"தென் தமிழகத்தின் வளர்ச்சியில் இது திருப்புமுனை" எதை சொல்கிறார் பிரதமர் மோடி?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தென் தமிழகத்தின் வளர்ச்சியில் இது திருப்புமுனை" எதை சொல்கிறார் பிரதமர் மோடி?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
Budget SUV Cars: 20 லட்சம்தான் பட்ஜெட்! மஹிந்திரா, டாடா, மாருதியின் சொகுசான SUV கார்கள் இதுதான் மக்களே!
Budget SUV Cars: 20 லட்சம்தான் பட்ஜெட்! மஹிந்திரா, டாடா, மாருதியின் சொகுசான SUV கார்கள் இதுதான் மக்களே!
Embed widget