“தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக் கூடாது; கட்டுப்பாடுகளை நீக்குங்கள்” - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, கொள்கை முடிவு எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அரசியல் சாசனப் பிரிவு 21 ன் கீழ் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள எந்தவொரு தனிநபரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய அரசு முன்னெடுக்கும் கொரோனா தடுப்பு இயக்கம் திருப்திகரமாக உள்ளது என்றும், தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















