மேலும் அறிய

’அரெஸ்ட் வேறு; காவல் வேறு!’ - கைது நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!

சட்டம் அனுமதிக்கின்றது என்பதைப் பயன்படுத்தி, தனி மனித சுதந்திரத்தைத் தடுப்பதற்காக அரசு கைதைப் பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

சட்டம் அனுமதிக்கின்றது என்பதைப் பயன்படுத்தி, தனி மனித சுதந்திரத்தைத் தடுப்பதற்காக அரசு கைதைப் பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

”அரசியலமைப்பு தனி மனித சுதந்திரத்தைத் தனியுரிமையாக அளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரைக் காவலில் எடுக்கும் நிர்பந்தம் ஏற்படும் அளவுக்குக் குற்றச் செயல் நிகழ்ந்தாலோ, சாட்சிகளைக் கலைக்கும் சூழல் இருந்தாலோ, குற்றம் சாட்டப்பட்டவர் தப்பித்துச் செல்லும் வாய்ப்பு இருந்தாலோ கைது செய்யும் உரிமை இருக்கிறது. சட்டம் அனுமதி தருகின்றது என்ற ஒரே காரணத்திற்காகக் கைது நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல், ஹ்ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.

கைது செய்வதற்கான அதிகாரத்தின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், நியாயமாகக் கைது செய்வதற்கும் இடையில் இருக்கும் வேறுபாடு கருதப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

’அரெஸ்ட் வேறு; காவல் வேறு!’ - கைது நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!

"தொடர்ச்சியாக கைது செய்யும்போது, கைது செய்யப்படும் நபரின் சமூக அந்தஸ்து பாதிப்படைகிறது. புலனாய்வு செய்யும் அதிகாரி குற்றம் சாட்டவர் தப்பித்துவிடுவார் என்றோ, உத்தரவுகளை மீறுகிறார் என்றோ எண்ணினால் கைது செய்யலாம். இல்லையேல் கைது செய்யும் அவசியம் அந்த அதிகாரிக்கு இல்லை” என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.  

இந்த உத்தரவு தொழிலதிபர் சித்தார்த்துக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி, மூத்த வழக்கறிஞர்கள் பிரமோத் குமார் தூபே, ரவி ஷர்மா, ராகுல் ஷ்யாம் பண்டாரி ஆகியோர் தொடுத்த மேல் முறையீட்டின் மீது அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், கடந்த ஜூலை மாதம் அலஹாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

2007-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில அரசு பூங்கா, அருங்காட்சியம் கட்டுவதற்காக உருவாக்கிய திட்டம் ஒன்றில் சதியில் ஈடுபட்டு, பொதுப் பணத்தில் 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டை ஏற்படுத்திய குற்றத்தின் மீது இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. 

உச்சநீதிமன்ற அமர்விடம் ஜாமீன் கோரிய வழக்கறிஞர் தூபே, தனது வழக்குதாரர் கடந்த 7 ஆண்டுகளாக இந்த விசாரணையில் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கூறினார். மேலும், அவரைச் சிறையில் அடைக்க எந்த நிர்பந்தமும் இல்லை என்றும், அவர் தப்பிக்கவோ, சாட்சிகளைக் கலைக்க எந்த வாய்ப்பும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.

’அரெஸ்ட் வேறு; காவல் வேறு!’ - கைது நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!

இதுகுறித்து வழக்கறிஞர் தூபே, ‘இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 170வது பிரிவைக் காவல்துறை தவறாகப் புரிந்துகொண்டுள்ளது. 170-வது பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது கைது (Arrest) என்று குறிப்பிடாமல், ‘காவலில்’ (Custody) வைக்க வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

அவர் கூறியுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், 170-வது சட்டப்பிரிவின் படி, கைது செய்வது அவசியம் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை செய்யும் அதிகாரியுடன் நீதிமன்றத்திற்கு வந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது உடனிருந்தால் போதும் எனக் கூறியுள்ளது. இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
Embed widget