மேலும் அறிய

"போர் தேவை இல்ல.. அமைதிதான் வேணும்" தைரியமாக சொன்ன சித்தராமையா 

இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், போருக்கு ஆதரவு தர மாட்டேன் என கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், போருக்கு ஆதரவு தர மாட்டேன் என கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அரசு, எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஆதரவு தரப்படும் என ராகுல் காந்தி கூறிய நிலையில், சித்தராமையாவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்:

ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படும் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், போருக்கு ஆதரவு தர மாட்டேன் என கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மத்திய அரசுடன் ஒத்துழைத்து பாகிஸ்தான் நாட்டினரை மாநிலத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களின் சரியான எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை. பெங்களூருவில் நல்ல எண்ணிக்கையில் இருக்கலாம். நாங்கள் மத்திய அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுப்போம்.

தைரியமாக சொன்ன சித்தராமையா:

பாகிஸ்தானுடன் போர் தேவையில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இருப்பினும், பாதுகாப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். காஷ்மீரில் பாதுகாப்பை அதிகரிக்கத் தவறியதன் மூலம் மத்திய அரசு மக்களை ஏமாற்றியது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன என்று நம்பி மக்கள் காஷ்மீருக்குச் சென்றது வருத்தமளிக்கிறது. இவை வெறும் கோஷங்கள் மட்டுமே, உண்மையில் காணப்படவில்லை. பாதுகாப்பு குறைபாட்டை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 26 பேரின் உயிரை மீண்டும் கொண்டு வர முடியுமா" என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, "பெங்களூருவில், கர்நாடகாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் பற்றிய தகவல்களை மாநில அரசு சேகரித்து வருகிறது. மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளின்படி அவர்கள் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதலில் அவர்களுக்கு எந்த விலக்கும் இல்லாததால், பாகிஸ்தான் மாணவர்கள் கூட தங்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டியிருக்கும். பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு உடனடியாக வெளியேறச் சொல்லுமாறு மாவட்டங்களில் உள்ள அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு, எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஆதரவு தரப்படும் என ராகுல் காந்தி கூறிய நிலையில், சித்தராமையாவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
Embed widget