மேலும் அறிய

"போர் தேவை இல்ல.. அமைதிதான் வேணும்" தைரியமாக சொன்ன சித்தராமையா 

இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், போருக்கு ஆதரவு தர மாட்டேன் என கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், போருக்கு ஆதரவு தர மாட்டேன் என கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அரசு, எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஆதரவு தரப்படும் என ராகுல் காந்தி கூறிய நிலையில், சித்தராமையாவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்:

ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படும் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், போருக்கு ஆதரவு தர மாட்டேன் என கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மத்திய அரசுடன் ஒத்துழைத்து பாகிஸ்தான் நாட்டினரை மாநிலத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களின் சரியான எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை. பெங்களூருவில் நல்ல எண்ணிக்கையில் இருக்கலாம். நாங்கள் மத்திய அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுப்போம்.

தைரியமாக சொன்ன சித்தராமையா:

பாகிஸ்தானுடன் போர் தேவையில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இருப்பினும், பாதுகாப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். காஷ்மீரில் பாதுகாப்பை அதிகரிக்கத் தவறியதன் மூலம் மத்திய அரசு மக்களை ஏமாற்றியது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன என்று நம்பி மக்கள் காஷ்மீருக்குச் சென்றது வருத்தமளிக்கிறது. இவை வெறும் கோஷங்கள் மட்டுமே, உண்மையில் காணப்படவில்லை. பாதுகாப்பு குறைபாட்டை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 26 பேரின் உயிரை மீண்டும் கொண்டு வர முடியுமா" என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, "பெங்களூருவில், கர்நாடகாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் பற்றிய தகவல்களை மாநில அரசு சேகரித்து வருகிறது. மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளின்படி அவர்கள் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதலில் அவர்களுக்கு எந்த விலக்கும் இல்லாததால், பாகிஸ்தான் மாணவர்கள் கூட தங்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டியிருக்கும். பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு உடனடியாக வெளியேறச் சொல்லுமாறு மாவட்டங்களில் உள்ள அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு, எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஆதரவு தரப்படும் என ராகுல் காந்தி கூறிய நிலையில், சித்தராமையாவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Udhayanidhi Stalin Interview : ’திமுகவிற்கு எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
’திமுகவின் எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Embed widget