மேலும் அறிய

"சாதியை வைத்து அரசியல் செய்யமாட்டேன்; ஆனால்என் சாதிய மறைக்க விரும்பல" - மனம் திறந்த சரத் பவார்

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் சரத் பவாரின் சாதிச் சான்றிதழ் போன்ற ஆவணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மராத்தா சமூகத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டம் மகாராஷ்டிராவை பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. மகாராஷ்டிர அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் மராத்திய சமூகத்தினர், அம்மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு சதவிகிதமாக உள்ளனர். அரசியலில் ஆதிக்கம் செலுத்தினாலும் பெரும்பாலும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். 

மராத்திய இடஒதுக்கீடு விவகாரம்:

கடந்த 1962ஆம் ஆண்டுக்கு பிந்தைய காலத்தில், மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்த 18 பேரில் 12 முதலமைச்சர்கள் மராத்திய சமூகத்தை சேர்ந்தவர்களே ஆவர். சட்டப்பேரவை உறுப்பினர்களில் 60 சதவிகிதத்தினர், மராத்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், காலப்போக்கில், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். 

இதன் காரணமாக, தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம், அம்மாநில அரசியலை உலுக்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான சரத் பவாரின் சாதிச் சான்றிதழ் போன்ற ஆவணம் இணையத்தில் வைரலானது.

அதில், சரத் பவார், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. மராத்திய சமூகத்தை சேர்ந்த சரத் பவாரை, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என அந்த சாதிச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இணையத்தில் வைரலாகும் சரத் பவாரின் சாதிச் சான்றிதழ்:

இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் சாதிச் சான்றிதழ் பொய்யானது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பியும் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சூலே விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து விரிவாக பேசிய சரத் பவார், "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் மீது அனைத்து மரியாதையும் உண்டு. ஆனால், நான் பிறந்த சாதியை மறைக்க விரும்பவில்லை. உலகம் முழமைக்கும் என் சாதி தெரியும். நான் சாதியை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யவில்லை. செய்யவும் மாட்டேன். ஆனால், அந்த சமூகத்தின் பிரச்னைகளை தீர்க்க நான் அனைத்தையும் செய்வேன்" என்றார்.

மராத்திய இடஒதுக்கீடு குறித்து பேசிய அவர், "இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரம்பில் உள்ளது. மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் இளைய தலைமுறையினர் தீவிரமாக உள்ளனர். அதை புறக்கணிக்க முடியாது. ஆனால், இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலத்திற்கும், மத்திய அரசுக்கே உள்ளது" என்றார்.                                                                                               

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Keralam: இப்படி ஒரு மோசமான மனைவியா? .. நடத்துநருக்காக கண்ணீர் விடும் கேரளம்!
Keralam: இப்படி ஒரு மோசமான மனைவியா? .. நடத்துநருக்காக கண்ணீர் விடும் கேரளம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Actor Dhanush Political Entry : ’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
DMK MLA Markandeyan : திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Embed widget