மேலும் அறிய

"சாதியை வைத்து அரசியல் செய்யமாட்டேன்; ஆனால்என் சாதிய மறைக்க விரும்பல" - மனம் திறந்த சரத் பவார்

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் சரத் பவாரின் சாதிச் சான்றிதழ் போன்ற ஆவணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மராத்தா சமூகத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டம் மகாராஷ்டிராவை பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. மகாராஷ்டிர அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் மராத்திய சமூகத்தினர், அம்மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு சதவிகிதமாக உள்ளனர். அரசியலில் ஆதிக்கம் செலுத்தினாலும் பெரும்பாலும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். 

மராத்திய இடஒதுக்கீடு விவகாரம்:

கடந்த 1962ஆம் ஆண்டுக்கு பிந்தைய காலத்தில், மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்த 18 பேரில் 12 முதலமைச்சர்கள் மராத்திய சமூகத்தை சேர்ந்தவர்களே ஆவர். சட்டப்பேரவை உறுப்பினர்களில் 60 சதவிகிதத்தினர், மராத்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், காலப்போக்கில், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். 

இதன் காரணமாக, தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம், அம்மாநில அரசியலை உலுக்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான சரத் பவாரின் சாதிச் சான்றிதழ் போன்ற ஆவணம் இணையத்தில் வைரலானது.

அதில், சரத் பவார், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. மராத்திய சமூகத்தை சேர்ந்த சரத் பவாரை, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என அந்த சாதிச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இணையத்தில் வைரலாகும் சரத் பவாரின் சாதிச் சான்றிதழ்:

இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் சாதிச் சான்றிதழ் பொய்யானது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பியும் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சூலே விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து விரிவாக பேசிய சரத் பவார், "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் மீது அனைத்து மரியாதையும் உண்டு. ஆனால், நான் பிறந்த சாதியை மறைக்க விரும்பவில்லை. உலகம் முழமைக்கும் என் சாதி தெரியும். நான் சாதியை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யவில்லை. செய்யவும் மாட்டேன். ஆனால், அந்த சமூகத்தின் பிரச்னைகளை தீர்க்க நான் அனைத்தையும் செய்வேன்" என்றார்.

மராத்திய இடஒதுக்கீடு குறித்து பேசிய அவர், "இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரம்பில் உள்ளது. மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் இளைய தலைமுறையினர் தீவிரமாக உள்ளனர். அதை புறக்கணிக்க முடியாது. ஆனால், இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலத்திற்கும், மத்திய அரசுக்கே உள்ளது" என்றார்.                                                                                               

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
Embed widget