மேலும் அறிய

"சாதியை வைத்து அரசியல் செய்யமாட்டேன்; ஆனால்என் சாதிய மறைக்க விரும்பல" - மனம் திறந்த சரத் பவார்

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் சரத் பவாரின் சாதிச் சான்றிதழ் போன்ற ஆவணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மராத்தா சமூகத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டம் மகாராஷ்டிராவை பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. மகாராஷ்டிர அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் மராத்திய சமூகத்தினர், அம்மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு சதவிகிதமாக உள்ளனர். அரசியலில் ஆதிக்கம் செலுத்தினாலும் பெரும்பாலும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். 

மராத்திய இடஒதுக்கீடு விவகாரம்:

கடந்த 1962ஆம் ஆண்டுக்கு பிந்தைய காலத்தில், மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்த 18 பேரில் 12 முதலமைச்சர்கள் மராத்திய சமூகத்தை சேர்ந்தவர்களே ஆவர். சட்டப்பேரவை உறுப்பினர்களில் 60 சதவிகிதத்தினர், மராத்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், காலப்போக்கில், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். 

இதன் காரணமாக, தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம், அம்மாநில அரசியலை உலுக்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான சரத் பவாரின் சாதிச் சான்றிதழ் போன்ற ஆவணம் இணையத்தில் வைரலானது.

அதில், சரத் பவார், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. மராத்திய சமூகத்தை சேர்ந்த சரத் பவாரை, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என அந்த சாதிச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இணையத்தில் வைரலாகும் சரத் பவாரின் சாதிச் சான்றிதழ்:

இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் சாதிச் சான்றிதழ் பொய்யானது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பியும் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சூலே விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து விரிவாக பேசிய சரத் பவார், "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் மீது அனைத்து மரியாதையும் உண்டு. ஆனால், நான் பிறந்த சாதியை மறைக்க விரும்பவில்லை. உலகம் முழமைக்கும் என் சாதி தெரியும். நான் சாதியை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யவில்லை. செய்யவும் மாட்டேன். ஆனால், அந்த சமூகத்தின் பிரச்னைகளை தீர்க்க நான் அனைத்தையும் செய்வேன்" என்றார்.

மராத்திய இடஒதுக்கீடு குறித்து பேசிய அவர், "இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரம்பில் உள்ளது. மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் இளைய தலைமுறையினர் தீவிரமாக உள்ளனர். அதை புறக்கணிக்க முடியாது. ஆனால், இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலத்திற்கும், மத்திய அரசுக்கே உள்ளது" என்றார்.                                                                                               

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Embed widget