மேலும் அறிய

Serum Institute: இந்தியர்களை பாதுகாக்க நாங்க இருக்கோம்.. புதிய கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரும் சீரம் நிறுவனம்

18 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கான பூஸ்டர் டோஸ் ஆக செலுத்த, தங்களது கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்குமாறு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலிடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தடுப்பூசிக்கு அனுமதி கோரும் சீரம் நிறுவனம்:

புதிய தடுப்பூசிக்கு அனுமதி அளிக்குமாறு சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலின்படி, 18 வயதானவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் ஆக செலுத்தும் வகையில் கோவோவாக்ஸ் தடுப்பூசியை சந்தைப்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. கோவிஷீல்ட் அல்லது கோவாக்சினில் ஏதேனும் ஒன்றில் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்கள், கோவோவாக்ஸ் தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸ் ஆக செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தடுப்பூசி என்ன செய்யும்?

கோவோவேக்ஸ் என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி ஆகும். அமெரிக்காவை சேர்ந்த நோவோவாக்ஸ் நிறுவனத்தால்  கோவோவேக்ஸ் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு, உள்நாட்டில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்த சீரம் நிறுவனத்தின் லைசன்ஸின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தடுப்பு மருந்து,  SARS-CoV-2 க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு வளர்ப்பது என்பதை மனித உடலுக்குப் பழக்கப்படுத்த, ஸ்பைக் புரதங்களைப் பயன்படுத்தும் ஒரு மறுசீரமைப்பு புரத தடுப்பூசி ஆகும்.

உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்:

 கொரோனா வைரஸின் மாறுபாடுகளால் ஏற்படும் பயத்தை எதிர்கொள்ள, கோகோவாக்ஸ் தடுப்பு மருந்தை பூஸ்டர் ஷாட் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம் என, கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் உலக சுகாதார அமைப்பால் ஒப்புதல் வழங்கப்பட்டது. தடுப்பூசி இன்றி தவித்த பல ஏழை நாடுகளுக்கு, இந்த தடுப்பூசி அதிகளவில் விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி அறிவுரை:

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில், புதிய BF.7 வகை கொரோனா பரவல் தொடர்பாக டெல்லியில் உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், கூட்டம் மிகுந்த பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். ஆக்ஸிஜன் கையிருப்பு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்கவும் அறிவுரை வழங்கினார். 

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தல்:

முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் மண்ச்க் மாண்டவியா,  சீனாவில் கொரொனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்து வருகிறது. கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது. இருப்பினும், புதிய  கொரோனா வகையை கண்டறிய இந்தியாவில் சோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.  இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை தோராயமான மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான், சீரம் நிறுவனம் தனது புதிய பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை சந்தைப்படுத்த அனுமதி கோரி, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலிடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
Embed widget