மேலும் அறிய

Sedition Cases in India : பாஜக ஆட்சியில் பாய்ந்த தேசத் துரோக வழக்குகள் எத்தனை தெரியுமா...?

நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 326 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 6 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேசத்துரோக சட்டப்பிரிவான 124 ஏ-வை ரத்து செய்ய வேணடும் என்று தொடரப்பட்ட வழக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆங்கிலேயர் காலத்து தேசத்துரோக சட்டம் தற்போது பயன்படுத்தப்பட வேண்டுமா? மகாத்மா காந்தி, கோகலே போன்ற தலைவர்களின் குரலை ஒடுக்குவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது. விசாரணை அமைப்புகள் தேசத்துரோக சட்டங்களை தவறாக பயன்படுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

 கடந்த 2014ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரை தேசத்துரோக சட்டத்தின் கீழ் இந்தியாவில் 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக புள்ளிவிவரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்குகளில் அதிகபட்சமாக வடகிழக்கு மாநிலமான அசாமில் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 54 வழக்குகளில் 26 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 25 வழக்குகளில் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் அசாமில் தேசத்தரோக சட்டத்தின் கீழ் ஒருவர் கூட குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை.


Sedition Cases in India : பாஜக ஆட்சியில் பாய்ந்த தேசத் துரோக வழக்குகள் எத்தனை தெரியுமா...?

அசாம் மாநிலத்திற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகபட்சமாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 வழக்குகளில் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்ட்ரா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரே ஒரு தேசத்துரோக வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. பீகார், ஜம்மு – காஷ்மீர், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் குறைவான எண்ணிக்கையில் தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் சில வழக்குகளில் மட்டும் விசாரணை முடிந்துள்ளது.

மேகாலயா, மிசோரம், திரிபுரா, சிக்கிம், அந்தமான் நிகோபர், லட்சத்தீவுகள், புதுச்சேரி, சண்டீகர், டையூ டாமன் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒரு தேசத்துரோக வழக்குகள் கூட இதுவரை பதிவாகவில்லை. கடந்த 2014 முதல் 2019ம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 326 தேசத்துரோக வழக்குகளில் 141 வழக்குளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 6 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 


Sedition Cases in India : பாஜக ஆட்சியில் பாய்ந்த தேசத் துரோக வழக்குகள் எத்தனை தெரியுமா...?

பா.ஜ.க. ஆட்சி அமைந்த 2014ம் ஆண்டு 47 வழக்குகளும், 2015ம் ஆண்டு, 30 வழக்குகளும், 2016ம் ஆண்டு 35 வழக்குகளும், 2017ம் ஆண்டு 51 வழக்குகளும், 2018ம் ஆண்டு 70 வழக்குகளும் நாடு முழுவதும் தேசத்துரோக சட்டப்பிரிவான 124 ஏ- பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

இதுமட்டுமின்றி, மற்றொரு பாதுகாப்பு சட்டமான உபா-வின் கீழ் 2018ம் ஆண்டு மட்டும் 1,182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவற்றில் 92 சதவீத வழக்குகள் உத்தரபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், அசாம், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget