மேலும் அறிய

Secunderabad protest : பற்ற வைத்த நெருப்பு... பெட்டிக்குள் கதறிய 40 பேர்... பட்டென பாய்ந்து காப்பற்றிய ரயில்வே ஊழியர்!

செகந்திரபாத் ரயில்நிலையத்தில் கலவரக்காரர்கள் தீ வைத்தபோது ரயில்பெட்டிக்குள் மாட்டிக்கொண்ட 40 பயணிகளை ரயில்வே ஊழியர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.

இந்திய ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்தியா முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திரபாத் ரயில் நிலையத்திலும் இன்று காலை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ரயில்நிலையத்திற்குள் புகுந்து அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக வெடித்ததில் 3 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் ரயில்நிலையத்திற்குள் உள்ளே நுழைந்தபோது அங்கே தண்டவாளத்தில் பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராக இருந்த ரயில் ஒன்றின் ஏ1 கோச் மீது கற்கள், கட்டைகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த கோச்சில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 பயணிகள் உள்ளே இருந்துள்ளனர். திடீரென ரயில் மீது தாக்குதல் நடத்தியதால் பயணிகள் அலறியுள்ளனர்.


Secunderabad protest : பற்ற வைத்த நெருப்பு... பெட்டிக்குள் கதறிய 40 பேர்... பட்டென பாய்ந்து காப்பற்றிய ரயில்வே ஊழியர்!

மேலும், ரயில் மீது தாக்குதல் நடத்திய அவர்கள் சட்டென்று அந்த பெட்டிற்கு தீ வைத்தனர். தாக்குதலினால் அலறிக்கொண்டிருந்த பயணிகள் திடீரென தீ வைத்ததால் உள்ளே இருந்த பயணிகள் பீதியில் அங்குமிங்கும் ஓடியுள்ளனர்.

கலவரக்காரர்கள் தீ வைத்த உடனே சுதாரித்துக்கொண்ட அங்கிருந்த ரயில்வே ஊழியரான ஏசி பவர் கார் மெக்கானிக்கான சுமன்குமார் சர்மா சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலின் உள்ளே இருந்த 40 பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார். மேலும், அந்த கோச்சை அருகில் இருந்த பெட்டிக்கு நகர்த்தியுள்ளார்.


Secunderabad protest : பற்ற வைத்த நெருப்பு... பெட்டிக்குள் கதறிய 40 பேர்... பட்டென பாய்ந்து காப்பற்றிய ரயில்வே ஊழியர்!

பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு படையினரின் உதவியுடன் 40 பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கே இருந்த இரு நுழைவு வாயில்களும் திறக்கப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். தீ வைக்கப்பட்ட ரயில் பெட்டிக்குள் சிக்கிக்கொண்ட 40 பயணிகளை பாதுகாப்பாக மீட்ட ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும்,  செகந்திரபாத் ரயில்நிலையத்தில் நடைபெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தின் காரணமாக செகந்திராபாத் மார்க்கமாக செல்லும் சுமார் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மட்டுமின்றி பீகார், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. செகந்திரபாத் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற வன்முறையில் மூன்று ரயில்களுக்கு போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க நு Agnipath Protest LIVE: செகந்திரபாத் ரயில்நிலைய வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு..! 15 பேர் படுகாயம்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget