மேலும் அறிய

Secunderabad protest : பற்ற வைத்த நெருப்பு... பெட்டிக்குள் கதறிய 40 பேர்... பட்டென பாய்ந்து காப்பற்றிய ரயில்வே ஊழியர்!

செகந்திரபாத் ரயில்நிலையத்தில் கலவரக்காரர்கள் தீ வைத்தபோது ரயில்பெட்டிக்குள் மாட்டிக்கொண்ட 40 பயணிகளை ரயில்வே ஊழியர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.

இந்திய ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்தியா முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திரபாத் ரயில் நிலையத்திலும் இன்று காலை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ரயில்நிலையத்திற்குள் புகுந்து அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக வெடித்ததில் 3 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் ரயில்நிலையத்திற்குள் உள்ளே நுழைந்தபோது அங்கே தண்டவாளத்தில் பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராக இருந்த ரயில் ஒன்றின் ஏ1 கோச் மீது கற்கள், கட்டைகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த கோச்சில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 பயணிகள் உள்ளே இருந்துள்ளனர். திடீரென ரயில் மீது தாக்குதல் நடத்தியதால் பயணிகள் அலறியுள்ளனர்.


Secunderabad protest : பற்ற வைத்த நெருப்பு... பெட்டிக்குள் கதறிய 40 பேர்... பட்டென பாய்ந்து காப்பற்றிய ரயில்வே ஊழியர்!

மேலும், ரயில் மீது தாக்குதல் நடத்திய அவர்கள் சட்டென்று அந்த பெட்டிற்கு தீ வைத்தனர். தாக்குதலினால் அலறிக்கொண்டிருந்த பயணிகள் திடீரென தீ வைத்ததால் உள்ளே இருந்த பயணிகள் பீதியில் அங்குமிங்கும் ஓடியுள்ளனர்.

கலவரக்காரர்கள் தீ வைத்த உடனே சுதாரித்துக்கொண்ட அங்கிருந்த ரயில்வே ஊழியரான ஏசி பவர் கார் மெக்கானிக்கான சுமன்குமார் சர்மா சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலின் உள்ளே இருந்த 40 பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார். மேலும், அந்த கோச்சை அருகில் இருந்த பெட்டிக்கு நகர்த்தியுள்ளார்.


Secunderabad protest : பற்ற வைத்த நெருப்பு... பெட்டிக்குள் கதறிய 40 பேர்... பட்டென பாய்ந்து காப்பற்றிய ரயில்வே ஊழியர்!

பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு படையினரின் உதவியுடன் 40 பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கே இருந்த இரு நுழைவு வாயில்களும் திறக்கப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். தீ வைக்கப்பட்ட ரயில் பெட்டிக்குள் சிக்கிக்கொண்ட 40 பயணிகளை பாதுகாப்பாக மீட்ட ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும்,  செகந்திரபாத் ரயில்நிலையத்தில் நடைபெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தின் காரணமாக செகந்திராபாத் மார்க்கமாக செல்லும் சுமார் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மட்டுமின்றி பீகார், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. செகந்திரபாத் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற வன்முறையில் மூன்று ரயில்களுக்கு போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க நு Agnipath Protest LIVE: செகந்திரபாத் ரயில்நிலைய வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு..! 15 பேர் படுகாயம்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
விலைவாசி உயர்வுக்கு மத்தியில் TTDC அதிரடி: 99 ரூபாய்க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி!
விலைவாசி உயர்வுக்கு மத்தியில் TTDC அதிரடி: 99 ரூபாய்க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி!
2000 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு! மாற்ற வழி இதோ!
2000 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு! மாற்ற வழி இதோ!
இனி தட்கால் டிக்கெட் மிஸ்ஸாகாது! IRCTC கொண்டு வரும் 4 அதிரடி மாற்றங்கள் - பயணிகள் குஷி!
இனி தட்கால் டிக்கெட் மிஸ்ஸாகாது! IRCTC கொண்டு வரும் 4 அதிரடி மாற்றங்கள் - பயணிகள் குஷி!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Hyundai Upcoming SUV: மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
Embed widget