மேலும் அறிய

சபரிமலை: பாதுகாப்பு தீவிரம்! தரிசனத்தை எளிதாக்க தேவசம் போர்டின் அதிரடி முடிவு! பக்தர்கள் மகிழ்ச்சி!

சபரிமலையில், திருமுற்றம் மற்றும் சன்னிதானத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது.

சபரிமலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நெரிசலற்ற தரிசனத்துக்காகவும் கூட்டுப் படைப்பிரிவுகள் சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் இன்று இரவு வரை பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


சபரிமலை: பாதுகாப்பு தீவிரம்! தரிசனத்தை எளிதாக்க தேவசம் போர்டின் அதிரடி முடிவு! பக்தர்கள் மகிழ்ச்சி!

சபரிமலையில் பல்வேறு துணை ராணுவப் படைகள் சார்பில் நேற்று முதல் கூடுதல் பாதுகாப்புகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக துணை ராணுவத்தின் பல்வேறு படை பிரிவுகள் சபரிமலைக்கு வந்துள்ளன. இன்று (டிச.6) கூடுதல் பாதுகாப்புகளுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பான தரிசனத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கூட்டு படைபிரிவுகள் சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. சன்னிதானம், பெரிய நடை பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் படைப் பிரிவினர் ஊர்வலமாகச் சென்றனர். இதுகுறித்து சந்நிதானம் காவல் துறை சிறப்பு அதிகாரி கூறுகையில், இன்று (சனிக்கிழமை) இரவு வரை தீவிர கண்காணிப்பும், சோதனையும் தொடரும். பொதுவாக நடை சாத்தப்பட்ட பிறகு மாளிகைப்புரம், மணிமண்டபம், அன்னதான மண்டபம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பக்தர்கள் ஓய்வெடுப்பது வழக்கம்.

ஆனால் இன்று ஒருநாள் மட்டும் இரவு நடை சாத்தியபிறகு பதினெட்டாம்படிக்கு மேல் பகுதியின் எந்த இடத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பம்பையில் இருந்து வரும் பக்தர்கள் நடை பந்தல் மற்றும் வரிசையில் காத்திருக்கலாம். ஆனால் நாளை ஞாயிறு காலையிலேயே பதினெடடாம் படி ஏற அனுமதிக்கப்படுவர். திருமுற்றம் மற்றும் சன்னிதானத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் சபரிமலையில் தினமும் கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதனால், பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் தங்களுக்கு தேவைப்படும் தரிசன தேதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெற உள்ளது.அன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதற்கான மண்டல வழிபாடுகள் கடந்த 17-ம் தேதி தொடங்கின. தொடக்கத்தில், ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இதை விட கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், கடும் நெரிசல் ஏற்பட்டது.


சபரிமலை: பாதுகாப்பு தீவிரம்! தரிசனத்தை எளிதாக்க தேவசம் போர்டின் அதிரடி முடிவு! பக்தர்கள் மகிழ்ச்சி!

நீதிமன்ற உத்தரவின்பேரில், ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதனால், நெரிசல் படிப்படியாகக் குறைந்தது. இருப்பினும், தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவுகள் ஜனவரி 10-ம் தேதி வரை முடிந்துவிட்டன.இதனால், பயணத்தை முன்னதாக திட்டமிடாத பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எரிமேலி, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் காத்திருந்து, ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்யும் நிலை இவர்களுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், சபரிமலையில் தேவசம் போர்டு மற்றும் போலீசார் சார்பில் பல்வேறு விதங்களிலும் கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, நெரிசல் குறைந்துள்ளது. எனவே, ஆன்லைன் மூலம் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை கூடுதலாக அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.இதற்காக, தேவசம் போர்டு இணையதளத்தில் இம்மாதம் 7-ம் தேதியிலிருந்து 25-ம் தேி வரையும், டிசம்பர் 30 முதல் ஜனவரி 10-ம் தேதி வரையும் புக்கிங் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் புக்கிங் செய்து வருவதால், இம்மாத கடைசி தேதிகள் வரை நிறைவடைந்துவிட்டன. தேவசம் போர்டின் இந்த திடீர் சலுகையால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஜூலை 15க்குள் PF கணக்கில் 8.25% வட்டி வரவு.. உங்கள் பேலன்ஸை எப்படி செக் செய்வது?
ஜூலை 15க்குள் PF கணக்கில் 8.25% வட்டி வரவு.. உங்கள் பேலன்ஸை எப்படி செக் செய்வது?
மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?
மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?
ஏடிஎம் பின் ஏன் 4 இலக்கங்கள்? சுவாரஸ்யமான உளவியல் கதை! விபரம் இதோ..
ஏடிஎம் பின் ஏன் 4 இலக்கங்கள்? சுவாரஸ்யமான உளவியல் கதை! விபரம் இதோ..
Onam special train : ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
Embed widget