மேலும் அறிய

சபரிமலை: மகர சங்கிரம பூஜை நாளை! கட்டுப்பாடுகள் தீவிரம், காத்திருப்பு நேரம் அதிகரிப்பு - முழு விவரம்!

சபரிமலையில் நாளை ஜன 14ல் மகர சங்கிரம பூஜை பகல் 3.8மணிக்குநடைபெறும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சபரிமலை கோயிலில் சிகர நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும்  நா:ளை ஜன 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பக்தர்களின் பாதுகாப்பிற்கு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.


சபரிமலை: மகர சங்கிரம பூஜை நாளை! கட்டுப்பாடுகள் தீவிரம், காத்திருப்பு நேரம் அதிகரிப்பு - முழு விவரம்!

மருத்துவ வசதிகள், தற்காலிக உணவகங்கள், போக்குவரத்து வசதிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எருமேலி, நிலக்கல் ஆகிய இடங்களில் இருந்து பம்பாவிற்கு செல்வோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வனப்பகுதிகளில் சமைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக, மத்திய பாதுகாப்பு படையுடன் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

மகர விளக்கையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 30-ந் தேதி திறக்கப்பட்டது. 31-ம் தேதி முதல் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடந்து வருகிறது. உடனடி தரிசன முன்பதிவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தற்போது, தினசரி 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.இதன் காரணமாக, பம்பை முதல் சன்னிதானம் வரையில்,5 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் 10 மணி முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.மகர விளக்கு  ஜோதியை காண, சாமி தரிசனத்துக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் இப்போதிருந்தே சபரிமலையில் ஆங்காங்கே முகாமிட்டு தங்கி வருகின்றனர். இதனால் சன்னிதானம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் 24 மணி நேரமும் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில், மகர விளக்கையொட்டி  நாளை பிற்பகல் 3.08 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெறும். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறும் போது மகர சங்கிரம பூஜை வழிபாடும், அபிஷேகமும் நடைபெறும். அபிஷேகத்துக்கு, திருவனந்தபுரம் கவடியார் கொட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்படும் சிறப்பு நெய் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்த சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக வழிபாட்டை முன்னிட்டுஅன்றைய தினம் பிற்பகல் 2.50 மணிக்கு நடை திறக்கப்படும். இந்த ஆண்டு (2026) மகரவிளக்குக்காக சுவாமி ஐயப்பனுக்குப் படைக்கப்படும் ஆபரணங்களை எடுத்துச் செல்லும் ஊர்வலம், தனு 28 (ஜனவரி 12) அன்று மதியம் 1 மணிக்கு பந்தளம் வலிய கோய்க்கல் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் இருந்து தொடங்கும்.ராஜபிரத்நிதி புனர்த்தம் நாளே நாராயண வர்மா தலைமையில் ஊர்வலம் நடைபெறும். மருதமண சிவன்குட்டி குருஸ்வாமி தலைமையிலான 26 பேர் கொண்ட ஊர்வலமும், 4 உதவியாளர்கள் கொண்ட 30 பேர் கொண்ட குழுவும் ஆபரணங்களை சபரிமலைக்கு கொண்டு வரும்.


சபரிமலை: மகர சங்கிரம பூஜை நாளை! கட்டுப்பாடுகள் தீவிரம், காத்திருப்பு நேரம் அதிகரிப்பு - முழு விவரம்!

பழங்கு வாகன சங்கத்தின் குருஸ்வாமி குருஸ்வாமி அஜயகுமார் தலைமையிலான 12 பேர் மற்றும் வாள் மற்றும் கேடயத்துடன் குருப் அனில் குமார் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள். ஊர்வலம் மூன்றாம் நாள் சபரிமலையை அடையும், அன்று மாலை 6:30 மணிக்கு ஆபரணங்களை வழங்கிய பிறகு தீபாராதனை நடைபெறும். ஜனவரி 18 ஆம் தேதி அரண்மனையில் களபாபிஷேகம் நடைபெறும், 19 ஆம் தேதி ராஜபிரதி திதியின் முன்னிலையில் குருதி நடைபெறும். 19 ஆம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

ஜனவரி 20 ஆம் தேதி காலை 6 மணிக்கு கோயில் மூடப்பட்டு, ராஜபிரதிநிதி திருவாபரணத்துடன் படிகளில் இறங்கி திரும்பும். 21 ஆம் தேதி பெருநாடு ஐயப்பன் கோயிலில் திருவாபரணம் வைக்கப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு தரிசனம் தொடங்கி மதியம் 2 மணி வரை தொடரும். 22 ஆம் தேதி அரண்முலா அரண்மனையில் திருவாபரணம் வைக்கப்படும். 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு பந்தளத்தை அடையும் ஊர்வலக் குழுவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும். பந்தளத்தை அடையும் திருவாபரணம் நேராக அரண்மனை பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்படும்.

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget