மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் உச்சம்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: அரவணை தட்டுப்பாடு வருமா?

சபரிமலையில் மண்டலகால வருமானம் கடந்தாண்டை விட எல்லா வகையிலும் அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் மொத்த வருமானம் ரூ.92 கோடி கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர். 


சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் உச்சம்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: அரவணை தட்டுப்பாடு வருமா?

இந்த நிலையில், கடந்த மாதம் நவம்பர் 16ம் தேதி மாலை முதல் சபரிமலையில் மண்டல காலம் துவங்கி நடந்து வருகிறது. தொடக்கத்தில் மூன்று நாட்கள் கட்டுக்கடங்கா கூட்டத்தால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.  கூட்ட நெரிசல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நிலைமை சீரடைந்து சில நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் அதிக கூட்டம் தொடர்ந்து காணப்படுகிறது.  குறிப்பாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரமாக குறைக்கப்பட்டதால் நீண்ட காத்திருப்பு மற்றும் நெரிசலும் குறைந்துள்ளது.

சபரிமலை சீசன் துவங்கிய 15 நாட்களில் வருமானம் ரூ.98 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 33.33 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு இதே கால அளவில் ரூ.69 கோடியாக இருந்தது. அரவணை விற்பனையில் மட்டும் ரூ.47 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.32 கோடியாக இருந்தது. 46.86 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்பம் விற்பனையில் ரூ.3.5 கோடி கிடைத்தது. இது கடந்த ஆண்டும் இதே அளவில் இருந்தது. காணிக்கையாக ரூ.26 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.22 கோடியாக இருந்தது. 18.18 சதவீதம் அதிகரித்துள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் உச்சம்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: அரவணை தட்டுப்பாடு வருமா?

15 நாட்களில் 12.47 லட்சம் பக்தர்கள் சபரிமலையேறி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேர் அதிகம். மண்டல சீசன் துவங்கும் முன் 46 லட்சம் டின் அரவணை ஸ்டாக் செய்யப்பட்டிருந்தது. தற்போது இது 27 லட்சமாக குறைந்துள்ளது. சாதாரண நிலையில் வினியோகம் நடந்தால் அரவணைக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று சபரிமலை செயல் அலுவலர் ஓ.ஜி.பிஜு கூறினார். கூட்டம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் பக்தர்கள் அதிக அளவில் அரவணை வாங்குகின்றனர். கூட்டம் அதிகமாகி நீண்ட காத்திருப்பு இருக்கும்போது பிரசாதம் கூட வாங்க முடியாமல் பக்தர்கள் திரும்பி செல்வர்.

தற்போது இரண்டரை லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 3 லட்சமாக அதிகரித்தால் மட்டுமே தட்டுப்பாடு இல்லாமல் வழங்க முடியும் என்று கருதப்படுகிறது. இதற்கான ஆலோசனையும்  நடந்து வருகிறது. டிசம்பர் 5ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கும் தேவசம் போர்டு கூட்டத்துக்கு பின் அன்னதானத்தில் மதியம் பாயாசத்துடன் விருந்தளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Report: சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: வீரர்களுக்கு காத்திருக்கும் பரிசு.. ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
West Bengal Vs EC: SIR நடவடிக்கை; மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி
SIR நடவடிக்கை; மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி
BJP: 2014ல் பாஜகவின் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தது? 11 ஆண்டுகளில் குவித்தது எவ்வளவு? 2025ல் சொத்துகள்
BJP: 2014ல் பாஜகவின் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தது? 11 ஆண்டுகளில் குவித்தது எவ்வளவு? 2025ல் சொத்துகள்
Embed widget