மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் உச்சம்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: அரவணை தட்டுப்பாடு வருமா?

சபரிமலையில் மண்டலகால வருமானம் கடந்தாண்டை விட எல்லா வகையிலும் அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் மொத்த வருமானம் ரூ.92 கோடி கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர். 


சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் உச்சம்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: அரவணை தட்டுப்பாடு வருமா?

இந்த நிலையில், கடந்த மாதம் நவம்பர் 16ம் தேதி மாலை முதல் சபரிமலையில் மண்டல காலம் துவங்கி நடந்து வருகிறது. தொடக்கத்தில் மூன்று நாட்கள் கட்டுக்கடங்கா கூட்டத்தால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.  கூட்ட நெரிசல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நிலைமை சீரடைந்து சில நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் அதிக கூட்டம் தொடர்ந்து காணப்படுகிறது.  குறிப்பாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரமாக குறைக்கப்பட்டதால் நீண்ட காத்திருப்பு மற்றும் நெரிசலும் குறைந்துள்ளது.

சபரிமலை சீசன் துவங்கிய 15 நாட்களில் வருமானம் ரூ.98 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 33.33 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு இதே கால அளவில் ரூ.69 கோடியாக இருந்தது. அரவணை விற்பனையில் மட்டும் ரூ.47 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.32 கோடியாக இருந்தது. 46.86 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்பம் விற்பனையில் ரூ.3.5 கோடி கிடைத்தது. இது கடந்த ஆண்டும் இதே அளவில் இருந்தது. காணிக்கையாக ரூ.26 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.22 கோடியாக இருந்தது. 18.18 சதவீதம் அதிகரித்துள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் உச்சம்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: அரவணை தட்டுப்பாடு வருமா?

15 நாட்களில் 12.47 லட்சம் பக்தர்கள் சபரிமலையேறி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேர் அதிகம். மண்டல சீசன் துவங்கும் முன் 46 லட்சம் டின் அரவணை ஸ்டாக் செய்யப்பட்டிருந்தது. தற்போது இது 27 லட்சமாக குறைந்துள்ளது. சாதாரண நிலையில் வினியோகம் நடந்தால் அரவணைக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று சபரிமலை செயல் அலுவலர் ஓ.ஜி.பிஜு கூறினார். கூட்டம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் பக்தர்கள் அதிக அளவில் அரவணை வாங்குகின்றனர். கூட்டம் அதிகமாகி நீண்ட காத்திருப்பு இருக்கும்போது பிரசாதம் கூட வாங்க முடியாமல் பக்தர்கள் திரும்பி செல்வர்.

தற்போது இரண்டரை லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 3 லட்சமாக அதிகரித்தால் மட்டுமே தட்டுப்பாடு இல்லாமல் வழங்க முடியும் என்று கருதப்படுகிறது. இதற்கான ஆலோசனையும்  நடந்து வருகிறது. டிசம்பர் 5ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கும் தேவசம் போர்டு கூட்டத்துக்கு பின் அன்னதானத்தில் மதியம் பாயாசத்துடன் விருந்தளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Chennai Power Cut: சென்னைல 05.06.2026 எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னைல 05.06.2026 எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
Embed widget