மேலும் அறிய

”ஆர்டிஐ தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது” - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்த கருத்துக்கு பொதுமக்கள் பலரும், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்படும் தகவல்கள் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும், இந்த தகவல்களை சுட்டிக்காட்டி வழக்கறிஞர்கள் வாதிட முடியாது எனவும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று தெரிவித்துள்ளனர். அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம் கன்வில்கார், சஞ்சீவ் கண்ணா அடங்கிய குழு, “தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறும் தகவல்களை சுட்டிக்காட்ட வேண்டாம். எங்களுடைய அனுபவத்தில் அந்த தகவல்கள் மிகுந்த நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை. அந்த தகவல்கள் ஒன்றுக்கு பின் முரணாக இருக்கின்றது என தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் நகரைச் சேர்ந்த ஒருவர், தனியாருக்குச் சொந்தமான தனது நிலத்தில் கோரக்பூர் மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் கட்டிடங்களை இடித்து வருவதாகவும், இடிபாடு வேலைகளை நிறுத்தாவிட்டால் அந்த பகுதியில் தங்கி இருக்கும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் வாழ இடமின்றி நிற்க நேரிடும் எனவும் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில், இடிக்க முற்பட்ட இடம் குடியிருப்புக்கு சொந்தமான நிலம்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக வழக்கு நடத்தி வரும் வழக்கறிஞர் உதய் ஆதித்யா பானர்ஜி, ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட இந்த தகவலை, கோரக்பூர் மேம்பாட்டு ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். ஆனால், வழக்கை விசாரித்த நீதிமன்ற குழு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களை வழக்கறிஞர்கள் வாதிடும்போது சமர்ப்பிக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், இந்த வழக்கு விசாரணை ஆகஸ்டு மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்த கருத்துக்கு பொதுமக்கள் பலரும், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ”தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்படும் தகவல்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லையென்றால், அதிகார பொறுப்பில் இருப்பவர்களிடம் இருந்தும், அதிகார அமைப்புகளிடம் இருந்தும் பொதுமக்களால் எப்படி தகவல் திரட்ட முடியும். இதுவே ஒரே வழி” என கருத்து தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget