மேலும் அறிய

Accident: அதிர்ச்சி.. பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளிப்பேருந்து.. 30 மாணவர்களின் கதி என்ன..?

தெலங்கானாவில் 30 மாணவர்களுடன் சென்ற தனியார் பள்ளிப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது மகாபுதபத் மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஏராளமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. அவ்வாறு இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரவும், அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளிப்பேருந்து:

இந்த நிலையில், அந்த பேருந்து தண்டல்பத்தி மண்டல் என்ற இடத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது பள்ளிப்பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தின் பள்ளிப்பேருந்தின் உள்ளே 30 மாணவர்கள் இருந்தனர். பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினரும், சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளும் பதறியடித்து பேருந்தில் சிக்கிய மாணவர்களை காப்பாற்ற ஓடினார்கள். அவர்கள் ஆம்புலன்சுக்கும், காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் அளித்தனர்.

ஓட்டுநரின் அதிவேகம்:

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, மருத்துவ துறையினர் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் தப்பினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த பேருந்து விபத்தில் சுமார் 30 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்திற்கு ஓட்டுநரே காரணம் என்று மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக ஓட்டியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக காயத்தில் சிக்கிய பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபத்தில் சிக்கிய பேருந்தும், விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கிய மாணவர்களை பொதுமக்கள் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று பல முறை அறிவுறுத்தியும், சில ஓட்டுனர்கள் இதுபோன்று அதிவேகமாக செல்வதால் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது நிகழ்கிறது.

இந்த விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு தக்க சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.                        

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget