மேலும் அறிய

சுகாதாரமற்ற மாஸ்க் அணிந்தால் கருப்புப் பூஞ்சை நோய் வருமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

2,3 வாரங்களுக்கு ஒரே மாஸ்க்கை உபயோகப்படுத்துவது கூட கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கலாம். என் 95 (N95) ரக மாஸ்க்குகளை 5 முறை மட்டுமே பயன்படுத்தலாம். ஆனால், ஒரே மாஸ்க்கை திரும்பத்திரும்ப அணிவதன் மூலமும் கருப்புப் பூஞ்சை நோய் வரக்கூடும்

சுகாதாரமற்ற மாஸ்க் அணிந்தால் கருப்புப் பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) நோய் வரக்கூடும் என எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் கூறியுள்ள கருத்தின் மீது பல்வேறு வாதவிவாதங்கள் எழுந்துள்ளன.
 
சுகாதாரமற்ற மாஸ்க் அணிந்தால் கருப்புப் பூஞ்சை நோய் வருமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
 
ஒடிசாவைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் பி.சரத் சந்திரா. இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் பேராசிரியாக இருக்கிறார். அவர் அண்மையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 2,3 வாரங்களுக்கு ஒரே மாஸ்க்கை உபயோகப்படுத்துவது கூட கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கலாம். என்95 (N95) ரக மாஸ்க்குகளை 5 முறை மட்டுமே பயன்படுத்தலாம். ஆனால், ஒரே மாஸ்க்கை திரும்பத் திரும்ப அணிவதன் மூலமும் கருப்புப் பூஞ்சை நோய் வரக்கூடும் எனக் கூறியிருந்தார். மேலும், கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் கொண்டோர், ஸ்டீராய்டுகள் பயன்படுத்துபவர், டோசிலிசுமாப் பயன்படுத்துபவர்கள், வெண்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகளுக்கு கருப்புப் பூஞ்சை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல், குளிரூட்டப்பட்ட ஆக்சிஜனை அப்படியே நோயாளிகளுக்கு செலுத்துவதும் கூட தொற்றை ஏற்படுத்தலாம் எனக் கூறினார்.
கருப்புப் பூஞ்சை அறிகுறிகள் என்னென்ன?
 
சுகாதாரமற்ற மாஸ்க் அணிந்தால் கருப்புப் பூஞ்சை நோய் வருமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
 
– கண்கள், மூக்கில் வலி மற்றும் சிவந்துவிடுதல் .
 
– லேசான காய்ச்சல் .
 
– எபிஸ்டாக்சிஸ் எனப்படும் மூக்கிலிருந்து ரத்தம் வழிதல் .
 
– தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், ரத்த வாந்தி, மனப்பதற்றம், குழப்பம், பார்வைக் குறைபாடு ஆகியன கருப்புப் பூஞ்சை நோயில் அறிகுறிகள் என மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
 
சுகாதாரமற்ற மாஸ்க் அணிந்தால் கருப்புப் பூஞ்சை நோய் வருமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
 
இப்படியான கருத்துகளால் ஏற்கெனவே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுடன் இப்போது கருப்புப் பூஞ்சை பற்றிய பயமும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. கருப்புப் பூஞ்சை பாதிப்பானது கொரோனாவிலிருந்து மீண்டவர்களை பெரிதும் தாக்குவதாக இதுவரை கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோயால் 400 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் இஎன்டி மருத்துவர் சுரேஷ் சிங் நருகா கூறும்போது, "சுகாதாரமற்ற மாஸ்குகளால் கருப்புப் பூஞ்சை நோய் வருகிறதா என்பது பற்றி இன்னும் அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. கட்டுப்பாடில்லாத ஸ்டீராய்டு பயன்பாடுதான் கருப்புப் பூஞ்சை நோய்க்கு முதல் காரணமாக நான் பார்க்கிறேன்.
அத்துடன், துவைக்காத முகக்கவசத்தை நீண்ட நேரம் பயன்படுத்துவதாலும், காற்றோட்டம் இல்லாத அறைகள், பேஸ்மென்ட் போன்ற இடங்களில் தொடர்ந்து இருப்பதாலும் இந்த நோயை ஏற்படுத்தலாம். 
 
சுகாதாரமற்ற மாஸ்க் அணிந்தால் கருப்புப் பூஞ்சை நோய் வருமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
 
மக்கள் கொரோனா அச்சத்தில் முகக்கவசத்தை மீண்டும் மீண்டும் துவைக்காமல் கூட அணிகின்றனர். ஈரப்பதம் மிக்க சுகாதாரமற்ற மாஸ்க்குகள் வழியே கருப்புப் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பின்னரும் முகக்கவசங்களைத் துவைத்துப் பயன்படுத்த வேண்டும். சுடு தண்ணீர், கிருமி நாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தவேண்டும்" எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
Embed widget