மேலும் அறிய

Rajya Sabha: எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம்.. மாநிலங்களவையில் தாக்கலான பொது சிவில் சட்ட மசோதா

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பொது சிவில் சட்டம் தொடர்பான தனிநபர் மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்கான மசோதா:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த ராஜஸ்தான் எம்.பி.யான கிரோடி லால் மீனா, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில்  இந்திய பொது சிவில் சட்ட மசோதா 2020-ஐ, தனி நபர் மசோதாவாக மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அதில், அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை  தயாரிப்பதற்கான அரசியலமைப்பின் தேசிய ஆய்வு மற்றும் விசாரணைக் குழுவை அமைப்பதற்கும், நாடு முழுவதும் அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

எதிர்க்கட்சிகள் கடும் அமளி:

இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஎம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பிட்ட தனிநபர் மசோதா, நாட்டில் நிலவும் சமூக கட்டமைப்பையும், வேற்றுமையில் ஒற்றுமை எனும் நிலையையும் மொத்தமாக அழித்து விடும் என கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப்பினர். இதனால் மாநிலங்களவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

தனிநபர் மசோதா மீது வாக்கெடுப்பு:

அப்போது குறுக்கிட்டு பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அரசியலமைப்பின் வழிகாட்டுதல் கொள்கைகளின் கீழ் உள்ள ஒரு பிரச்னையை எழுப்புவது உறுப்பினரின் சட்டபூர்வமான உரிமை. இந்த விஷயத்தை சபையில் விவாதிக்கட்டும். அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவது, மசோதாவை விமர்சிக்க முயற்சிப்பது தேவையற்றத  என  கூறினார். இதையடுத்து மசோதாவை விவாதிப்பது தொடர்பாக, குரல் வாக்கெடுப்பு நடத்த அவைத்தலைவர் ஜக்தீப் தங்கர் உத்தரவிட்டார். அப்போது, மசோதாவிற்கு ஆதரவாக 63 உறுப்பினர்களும், எதிராக 23 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

எதிர்க்கட்சிகள் கருத்து:

இதையடுத்து, நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு சமூகங்களுடனான பரந்த பொது ஆலோசனையின்றி, மக்களின் வாழ்வில் இத்தகைய பரந்த மாற்றங்களைக் கொண்ட மசோதாவை அறிமுகப்படுத்த முடியாது என்று ஒரு எம்.பி பேசியதாக லைவ் லா தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான சிவில் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று திமுகவின் திருச்சி சிவா கூறியுள்ளார்.

 

பொது சிவில் சட்டம்:

பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைக் குறிக்கிறது.  பெரும்பான்மையான நாடுகளில் அனைத்து சமயத்திற்கான பொது உரிமையில் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் சில நாடுகளில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில், உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களில், ஷரியத் சட்டம் முழுமையாக நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கான உரிமையியல் சட்டத்தைப் பொருத்தவரை, ஷரியத் சட்டம் மூலமே அமைந்துள்ளது. இதனை திருத்தி அமைக்க உச்சநீதிமன்றம் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் என பலர்  வலியுறுத்தி இருந்தாலும், இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இதுவரை இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget