மேலும் அறிய

ராஜஸ்தான்: குழந்தை பெற்றுக்கொள்ள பரோல்… பெண்ணின் கோரிக்கைக்கு இசைந்த உயர்நீதிமன்றம்!

இந்த உத்தரவின்போது நீதிமன்றம் இலக்கியம், மதம்சார்ந்த விஷயங்களையும், பிற நீதிமன்ற தீர்ப்புகளையும் மேற்கொள் காட்டியிருந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பதாக மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அந்த பெண்ணின் கணவருக்கு உயர்நீதிமன்றம் 15 நாள் பரோல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஃபர்ஜந்த் அலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தலால் (வயது 34). திருமணமான நிலையில் 2018 ல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அஜ்மீரில் உள்ள மத்திய சிறையில் நந்தலால் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியவில்லை. இவரது மனைவி,  சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரிடம் இருந்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பதாகவும் அதனால் அவருக்கும் பரோல் வழங்க வேண்டுவதாகவும் அந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தார். கடந்த டிசம்பர் மாதம் மனு அளிக்கப்பட்ட நிலையில் அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மனைவி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சந்தீப் மேக்தா, பர்சாந்த் அலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுவை நீதிபதிகள் சந்தீப் மேக்தா, பர்சாந்த் அலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நந்தலாலின் மனைவியின் கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் அவருக்கு 15 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.

ராஜஸ்தான்: குழந்தை பெற்றுக்கொள்ள பரோல்… பெண்ணின் கோரிக்கைக்கு இசைந்த உயர்நீதிமன்றம்!

11 மாதங்களுக்கு முன்பு நந்த்லால்க்கு 20 நாள் பரோல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவரது மனைவி, வழக்கறிஞர் ஒருவருடன் சிறை அதிகாரிகளை அணுகி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். தனது உரிமையை நிறைவேற்றும் வகையில் தனது கணவரை சில நாட்கள் பரோலில் விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் சிறை அதிகாரிகளிடம் இருந்து பதில் வராததால், கலெக்டரிடம் சென்று மனு அளித்துள்ளார். கலெக்டரும், பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நிலுவையில் வைத்திருந்த நிலையில், இறுதியாக உயர்நீதிமன்றத்தை அந்த பெண் நாடியுள்ளார். நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன் வைத்த பெண், தன் கணவர் தற்செயலாக ஒரு குற்றத்தை செய்ததாகவும், அவர் ஒரு தொழில்முறை குற்றவாளி அல்ல என்றும் அவர் கூறினார். மேலும், தனது கணவர் சிறை விதிகள் அனைத்தையும் கண்டிப்பாக பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

ராஜஸ்தான்: குழந்தை பெற்றுக்கொள்ள பரோல்… பெண்ணின் கோரிக்கைக்கு இசைந்த உயர்நீதிமன்றம்!

இந்த உத்தரவின்போது நீதிமன்றம் இலக்கியம், மதம்சார்ந்த விஷயங்களையும், பிற நீதிமன்ற தீர்ப்புகளையும் மேற்கொள் காட்டியிருந்தது. "சிறையில் உள்ள ஆயுள் கைதியின் மனைவி குழந்தை பெற்று கொள்ள உரிமை உள்ளது. அவர் எந்த குற்றங்களையும் செய்யவில்லை. தண்டனையை காரணம் காட்டி அவரது மனைவியை விருப்பத்தை தடுப்பது அவரது உரிமையை பறிப்பதோடு, அவரை மோசமாக பாதிக்கும். இந்து கிறிஸ்தவம், இஸ்லாம் என அனைத்து மதங்களுக்கு தாம்பத்தியம், வாரிசுகள், இல்லறம் குறித்து கூறியுள்ளன. இலக்கியங்களிலும் இது தொடர்பான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது" என்று கோர்ட் குறிப்பிட்டுள்ளது. மேலும், "கணவர் தண்டனை பெற்றதால் இந்த வழக்கில் அப்பாவி மனைவி பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு பெண்ணாக இருந்து அவர் தாயாக மாற குழந்தையை பெற்றேடுக்க வேண்டியது அவசியமாகும். அவர் தாயாகும்போது அவரது திப்பு இன்னும் பெரியதாக மாறுகிறது. குடும்பத்திலும் சமூகத்திலும் மிகவும் மரியாதைக்குரியவராக மாறுகிறார். கைதியின் மனைவி நிரபராதி என்பதால் அவர் பாதிக்கப்படக்கூடாது என நீதிமன்றம் கருதுகிறது. மேலும் இந்த விஷயத்தை மனிதாபிமான ரீதியாக நீதிமன்றம் அணுகுகிறது. இதனால் ஆயுள் தண்டனை பெற்ற கைதிக்கு 15 நாள் பரோல் வழங்கப்படுகிறது" என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Embed widget