மேலும் அறிய

குடியரசு தலைவரின் காலில் விழ முயன்ற பெண் இன்ஜினியர்...! அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?

பாதுகாப்பை மீறி மாநில பொது சுகாதார பொறியியல் துறையில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் முர்முவின் காலில் விழ முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

குடியரசுத் தலைவர் காலில் விழ முயற்சி:

கடந்த வாரம், ராஜஸ்தானுக்கு சென்ற குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் பாதுகாப்பில் விதி மீறல் நடந்தது. குடியரசு தலைவர் முர்மு பாலியில் சாரணர் வழிகாட்டி ஜம்போரியின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராஜஸ்தான் சென்றிருந்தார். பாதுகாப்பை மீறி மாநில பொது சுகாதார பொறியியல் துறையில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் முர்முவின் காலில் விழ முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காலில் விழ முயன்ற அம்பா சியோலை இடை நீக்கம் செய்து நீர் விநியோக துறையின் தலைமைப் பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "பொது சுகாதார பொறியியல் துறையின் இளநிலைப் பொறியாளரான அம்பா சியோல், பாலி மாவட்டம் ரோஹெட்டில் ஜனவரி 4 அன்று சாரணர் வழிகாட்டி ஜம்போரியின் தொடக்க நிகழ்ச்சியின் போது ஹெலிபேடில் குடியரசு தலைவர் பாதங்களைத் தொட முயன்று பாதுகாப்பு விதியை மீறினார். எனவே, ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் விதி 958இல் விதி 342இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்ட அம்பா சியோலை உடனடியாக இடைநீக்கம் செய்ய உத்தரவிடுகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குளறுபடி:

இதேபோல, சமீபத்தில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. கடந்த ஜனவரி 12ஆம் தேதி,  கர்நாடக மாநிலம் ஹூப்பாலியில்  நடைபெற்ற தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

இவ்விழா நடைபெறும் பகுதிக்கு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி வந்து கொண்டிருந்த போது, காரில் ஓரத்தில் நின்றபடியே பொதுமக்களுக்கு கை அசைத்து கொண்டு வந்தர். அப்போது, சாலையில் ஓரத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், பிரதமருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை மீறி, கையில் மாலையுடன் திடீரென மோடியின் அருகே வந்தார். 

இதை பார்த்த காவலர்கள் உடனடியாக சுதாரித்து, அவரை பிடித்து, சாலையின் ஓரத்தில் கொண்டு சென்றனர். மாலையுடன் வந்த நபரிடமிருந்து மாலையை பாதுகாப்பு பிரிவினர் பிடுங்கினர். ஆனால், அதை காவலரிடம் இருந்து பிரதமர் மோடி வாங்கி காரினுள் வைத்து கொண்டார்.

பிரதமருக்கு  SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். பிரதமர் எங்கு சென்றாலும் அவருக்கு எந்தவித பாதிப்பும் நிகழாத வகையில், பாதுகாப்பு அளிப்பது, இவர்களின் கடமையாகும்.

மாநில காவல்துறை மற்றும் எஸ்.பி.ஜி. ஆகியோரின் பாதுகாப்பு இருந்து போதும் , ஒரு நபர் எப்படி பிரதமரின் அருகே மாலையுடன் வந்தார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget