மேலும் அறிய

Raj Kundra Arrest: ராஜ் குந்த்ரா வழக்கு: ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீஸ் விசாரணை!

ராஜ் குந்த்ராவின் மனைவி ஷில்பா ஷெட்டியை மும்பை காவல்துறையினர் இன்று மாலை விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த 20ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவை ஜூலை 23 வரை போலீஸ் காவலில் வைக்கச் சொல்லி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் மும்பை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் அவரது சிறை நாட்கள் நீட்டிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ராஜ் குந்த்ராவை அழைத்துக் கொண்டு அவரது பங்களாவுக்கு விரைந்த காவல் துறையினர், அங்கு சோதனை நடத்தினர். பின்பு, ராஜ் குந்த்ராவின் மனைவி ஷில்பா ஷெட்டியை மும்பை காவல்துறையினர் இன்று மாலை விசாரணை நடத்தியுள்ளனர். அதில், ஷில்பா ஷெட்டியின் பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், ஷில்பா ஷெட்டி நடித்து விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கும்  ஹங்காமா-2 திரைப்படம் பற்றிய பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.இன்று மாலை விசாரணை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளத்தில் அவர் படம் குறித்து பதிவு செய்துள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

முன்னதாக, தன்னுடைய கணவர் கைது செய்யப்பட்ட இரண்ட நாட்களுக்கு பிறகு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "ஜேம்ஸ் தூபரின், "முன்பு நடந்ததை கோபத்துடனும், இனிமேல் என்ன நடக்கும் என்று பயத்துடனும் பார்க்காமல் தற்போது நடப்பதை கவனமாக பார்க்க வேண்டும்" என்ற வாசகத்துடன் தொடங்கியுள்ளார். நாம் எப்போதும் நமக்கு முன்பு பிறர் செய்த தீங்கு, நமக்கு ஏற்பட்ட சோகம், கெடு வாய்ப்பான சம்பவம் ஆகியவற்றை கோபத்துடன் திரும்பி பார்ப்போம். இல்லையேன்றால் வருங்காலத்தில் தோல்வியை சந்தித்துவிடுவோமா, வேலையை இழந்துவிடுவோமா, நோய் பாதிப்பிற்கு உள்ளாகிவிடுவோமா என்று மிகுந்த பயத்துடன் பார்ப்போம். அப்படி செய்வதற்கு பதிலாக நாம் தற்போது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை கவனத்துடன் பார்க்க வேண்டியது அவசியம்.

இதற்கு முன்பாக நான் பல சவால்களை எதிர்கொண்டுள்ளேன். இனிமேலும் என்னுடைய வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்வேன். அவை எதுவுமே தற்போது என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை கவனிக்காமல் இருக்குமாறு, என்னை தொந்தரவு செய்ததில்லை" எனப் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக திரைப்பட  நடிகைகளை நிர்வாணமாக நடிக்கவைத்து அதனை செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்வது தொடர்பான புகாரில் ஏற்கெனவே 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜ்குந்த்ரா மீது அடுத்தடுத்து சில குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன. ராஜ்குந்த்ரா தன்னை நிர்வாணமாக ஆடிஷன் செய்ததாக நடிகை சகாரிகா சுமன் அளித்த நேர்காணலும் கவனம் பெற்றது. இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதமே வைரலானது. அப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டத்து. அதன்பின்னர் கடந்த 20ஆம் தேதி இரவு ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார். 

இது குறித்து மும்பை போலீசார்செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஆபாசப்படம் தயாரிப்பு வழக்கில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அவரது மனைவியும், நடிகையுமான ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை. நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். ராஜ்குந்த்ராவால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன் வந்து புகாரளிக்கலாம். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். மேலும் இந்த புகார் தொடர்பாக ஷில்பா செட்டியிடம் விசாரணை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று ஷில்பா ஷெட்டி பதிவு ஒன்றை செய்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget