மேலும் அறிய

களையெடுக்கப்படும் ஊழல்...பணி செய்யாத அதிகாரிகள்...மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒருவர் நீக்கம்...ரயில்வே அதிரடி...!  

பணி செய்யாதவர்கள் மற்றும் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்றைய சூழலில், பல்வேறு பிரச்னைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தினாலும் முக்கிய பிரச்னையாக கருதப்படுவது ஊழல்.

இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் தொடர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ரயில்வே மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

பணி செய்யாதவர்கள் மற்றும் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 16 மாதங்களாக மூன்று நாள்களுக்கு ஒரு முறை ஒரு ஊழல் அதிகாரி நீக்கப்பட்டதாக உயர்மட்ட அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

அதேபோல, 139 அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டு விருப்பு ஓய்வை எடுக்க வைத்துள்ளனர். 38 அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு மூத்த அதிகாரிகள் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் ஹைதராபாத்தில் 5 லட்சம் ரூபாய் லஞ்சத்துடன் சிபிஐ பிடித்துள்ளது. மற்றொருவர் ராஞ்சியில் 3 லட்சம் ரூபாயுடன் சிக்கியுள்ளார்.

 

ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை குறித்து விவரித்த அந்த மூத்த அதிகாரி, "சிறப்பாக பணியாற்ற வேண்டும் அல்லது வேலையை விட்டு செல்ல வேண்டும் என்பதில் (ரயில்வே) அமைச்சர் (அஸ்வினி வைஷ்ணவ்) மிக தெளிவாக உள்ளார். கடந்த 2021ஆம், ஜூலை மாதம் முதல் மூன்று நாள்களுக்கும் ஒரு முறை ஒரு அதிகாரியை நீக்கி வருகிறோம்" என்றார்.

இந்த விவகாரத்தில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை 56(J) விதியை ரயில்வே பயன்படுத்தி உள்ளது. குறைந்தபட்சம் மூன்று மாத நோட்டீஸ் பீரியடுக்கு பிறகோ அல்லது மூன்று மாதத்திற்கான ஊதியத்தை அளித்த பிறகோ ஒரு அரசு ஊழியரை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைக்கலாம் அல்லது பணி நீக்கம் செய்யலாம்.

பணி செய்யாதவர்களை மத்திய அரசு பணி நீக்கம் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வினி வைஷ்ணவ், ஜூலை 2021 இல் ரயில்வே அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, ஒழுங்காக பணியாற்றவில்லை என்றால், "விருப்பு ஓய்வு எடுத்துக்கொண்டு வீட்டில் உட்காரும்படி" பலமுறை எச்சரித்துள்ளார்.

கட்டாய விருப்பு ஓய்வு அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் மின்சாரம் மற்றும் சிக்னலிங் துறை, மருத்துவம் மற்றும் குடிமை பணி, கடைகள், போக்குவரத்து மற்றும் இயந்திரவியல் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களும் அடங்குவர்.

விருப்பு ஓய்வு திட்டத்தின் (விஆர்எஸ்) கீழ், பணி காலத்தில் எஞ்சியிருக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு ஊழியருக்கு இரண்டு மாத ஊதியத்திற்கு சமமான சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், இதே போன்ற பலன்கள் கட்டாய ஓய்வூதியத்தில் அளிக்கப்படாது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
Embed widget