மேலும் அறிய

களையெடுக்கப்படும் ஊழல்...பணி செய்யாத அதிகாரிகள்...மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒருவர் நீக்கம்...ரயில்வே அதிரடி...!  

பணி செய்யாதவர்கள் மற்றும் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்றைய சூழலில், பல்வேறு பிரச்னைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தினாலும் முக்கிய பிரச்னையாக கருதப்படுவது ஊழல்.

இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் தொடர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ரயில்வே மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

பணி செய்யாதவர்கள் மற்றும் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 16 மாதங்களாக மூன்று நாள்களுக்கு ஒரு முறை ஒரு ஊழல் அதிகாரி நீக்கப்பட்டதாக உயர்மட்ட அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

அதேபோல, 139 அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டு விருப்பு ஓய்வை எடுக்க வைத்துள்ளனர். 38 அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு மூத்த அதிகாரிகள் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் ஹைதராபாத்தில் 5 லட்சம் ரூபாய் லஞ்சத்துடன் சிபிஐ பிடித்துள்ளது. மற்றொருவர் ராஞ்சியில் 3 லட்சம் ரூபாயுடன் சிக்கியுள்ளார்.

 

ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை குறித்து விவரித்த அந்த மூத்த அதிகாரி, "சிறப்பாக பணியாற்ற வேண்டும் அல்லது வேலையை விட்டு செல்ல வேண்டும் என்பதில் (ரயில்வே) அமைச்சர் (அஸ்வினி வைஷ்ணவ்) மிக தெளிவாக உள்ளார். கடந்த 2021ஆம், ஜூலை மாதம் முதல் மூன்று நாள்களுக்கும் ஒரு முறை ஒரு அதிகாரியை நீக்கி வருகிறோம்" என்றார்.

இந்த விவகாரத்தில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை 56(J) விதியை ரயில்வே பயன்படுத்தி உள்ளது. குறைந்தபட்சம் மூன்று மாத நோட்டீஸ் பீரியடுக்கு பிறகோ அல்லது மூன்று மாதத்திற்கான ஊதியத்தை அளித்த பிறகோ ஒரு அரசு ஊழியரை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைக்கலாம் அல்லது பணி நீக்கம் செய்யலாம்.

பணி செய்யாதவர்களை மத்திய அரசு பணி நீக்கம் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வினி வைஷ்ணவ், ஜூலை 2021 இல் ரயில்வே அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, ஒழுங்காக பணியாற்றவில்லை என்றால், "விருப்பு ஓய்வு எடுத்துக்கொண்டு வீட்டில் உட்காரும்படி" பலமுறை எச்சரித்துள்ளார்.

கட்டாய விருப்பு ஓய்வு அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் மின்சாரம் மற்றும் சிக்னலிங் துறை, மருத்துவம் மற்றும் குடிமை பணி, கடைகள், போக்குவரத்து மற்றும் இயந்திரவியல் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களும் அடங்குவர்.

விருப்பு ஓய்வு திட்டத்தின் (விஆர்எஸ்) கீழ், பணி காலத்தில் எஞ்சியிருக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு ஊழியருக்கு இரண்டு மாத ஊதியத்திற்கு சமமான சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், இதே போன்ற பலன்கள் கட்டாய ஓய்வூதியத்தில் அளிக்கப்படாது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
Embed widget