மேலும் அறிய

22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல்...ஒற்றுமை பயணத்தில் உள்ள ராகுல் காந்தி வாக்களிப்பாரா?

இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி நடத்தி வருவதால் அவர் எங்கு வாக்களிக்கபோகிறார் என்பது கேள்வியாக இருந்தது.

கிட்டத்தட்ட 22 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று  நடைபெறுகிறது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி நடத்தி வருவதால் அவர் எங்கு வாக்களிக்கபோகிறார் என்பது கேள்வியாக இருந்தது. இந்நிலையில், இதற்கான பதிலை காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் ராகுல் காந்தி வாக்களிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ஜெய்ராம் ரமேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி நாளை எங்கு வாக்களிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த ஊகமும் இருக்கக்கூடாது. அவர் மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளான சுமார் 40 பாரத யாத்ரிகளுடன் பெல்லாரி சங்கனக்கல்லுவில் உள்ள இந்திய ஒற்றுமை பயணத்தின் முகாம் தளத்தில் வாக்களிப்பார்" என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் 19ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை பயயணம், தற்போது கர்நாடகாவை எட்டியுள்ளது. தற்போதுவரை, கிட்டத்தட்ட 1000 கிமீட்டருக்கு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அனைவரின் கவனமும் காங்கிரஸ் தேர்தல் பக்கம் திரும்பியுள்ள நிலையில், அடுத்த காங்கிரஸ் தலைவர் சுதந்திரமாக இயங்குவாரா அல்லது காந்தி குடும்பத்தின் நிழலில் இயங்குவாரா என்ற கேள்வியை அரசியல் வல்லுநர்கள் முன்வைத்து வருகின்றனர். இருப்பினும், கட்சியின் புதிய தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் முடிவுகளை எடுப்பதற்கும், அமைப்பை நடத்துவதற்கும் சுதந்திரம் இருக்கும் என்று ராகுல் காந்தி தெளிவுப்படுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் நடந்து வரும் இந்திய ஒற்றுமை பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவருக்கும் தனித் தனியே பார்வைகள் உண்டு. அவர்களுக்கு என சொந்த கருத்துகள் உள்ளன. அவர்களை 'ரிமோட் கண்ட்ரோல்' என்று அழைப்பது இருவரையும் அவமதிக்கும் செயலாகும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget