மேலும் அறிய

"சமூக புரட்சி.. செஞ்சி காட்டுவோம்" பழைய ஃபார்முலாவை மீண்டும் கையில் எடுத்த ராகுல் காந்தி!

தெலங்கானாவில் சாதிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதை தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. இதை, சமூக நீதியை நோக்கிய புரட்சி என ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.

மக்களவை தேர்தலில் சாதி கணக்கெடுப்பு குறித்து தொடர் பிரச்சாரம் செய்து, குறிப்பிடத்தகுந்த வெற்றியை பதிவு செய்த ராகுல் காந்தி, மீண்டும் அதே ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார். தெலங்கானாவில் சாதிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதை தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டுக்கு வழிகாட்டிய தெலங்கானா:

சாதிய கணக்கெடுப்பு உள்பட பல வாக்குறுதிகளை அளித்து தெலங்கானாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், ஒவ்வொரு வாக்குறுதிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி, அங்கு சாதிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில், தெலங்கானாவின் மக்கள் தொகையில் 56.33 சதவிகிதத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரம்பை தெலங்கானா காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது. அரசு வேலைகள், கல்வி நிறுவனங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரம்பு 42ஆக உயர்த்த வழி செய்யும் இரண்டு மசோதாக்கள் தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட ராகுல் காந்தி, "தெலங்கானாவில் ஓபிசி இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக காங்கிரஸ் அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.

ராகுல் காந்தியின் பழைய ஃபார்முலா:

மாநிலத்தில் அறிவியல் பூர்வமான சாதி எண்ணிக்கை மூலம் பெறப்பட்ட ஓபிசி சமூகத்தினரின் உண்மையான எண்ணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் அவர்களின் சம பங்களிப்பை உறுதி செய்வதற்காக சட்டமன்றத்தில் 42% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இது உண்மையில் சமூக நீதியை நோக்கிய ஒரு புரட்சிகரமான படியாகும். இதன் மூலம் மாநிலத்தில் 50% இடஒதுக்கீடு என்ற சுவரும் இடிக்கப்பட்டுள்ளது. சாதி கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம், அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்யும் கொள்கைகள் வகுக்கப்படும். தெலுங்கானா அரசு இதற்காக ஒரு சுயாதீன நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது.

எக்ஸ்ரே மூலம் மட்டுமே - அதாவது சாதி கணக்கெடுப்பு மூலம் மட்டுமே - பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தங்கள் உரிய உரிமைகளைப் பெற முடியும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். தெலங்கானா வழி காட்டியுள்ளது. இதுதான் முழு நாட்டிற்கும் தேவை. இந்தியாவில் சாதி கணக்கெடுப்பு நிச்சயமாக நடக்கும் நாங்கள் அதைச் செய்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: துடிக்கும் டிரம்ப்! அடுத்தடுத்து டிடிவி புகார்.. சிக்கலில் தவெக - 11 மணி நிகழ்வுகள்!
Top 10 News Headlines: துடிக்கும் டிரம்ப்! அடுத்தடுத்து டிடிவி புகார்.. சிக்கலில் தவெக - 11 மணி நிகழ்வுகள்!
இனி வெயிட்டிங் லிஸ்ட் டென்ஷன் வேண்டாம்! ஏஐ வைத்து கன்ஃபார்ம் பண்ணலாம்.. ரயில்வேயின் மாஸ் அப்டேட்!
இனி வெயிட்டிங் லிஸ்ட் டென்ஷன் வேண்டாம்! ஏஐ வைத்து கன்ஃபார்ம் பண்ணலாம்.. ரயில்வேயின் மாஸ் அப்டேட்!
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
வந்தே பாரத்துக்கு அடுத்த பெரிய திட்டம்! தென்னிந்தியாவில் புல்லட் ரயில் விரைவில்!..
வந்தே பாரத்துக்கு அடுத்த பெரிய திட்டம்! தென்னிந்தியாவில் புல்லட் ரயில் விரைவில்!..
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:
PM Modi: "WFH பாருங்க.. தங்கம் வாங்காதீங்க.. பெட்ரோல் கம்மியா யூஸ் பண்ணுங்க.." மக்களுக்கு மோடி வேண்டுகோள்
CM Vijay: ஓட்டுப்போட்டவங்க நம்பிக்கையை காப்பாத்திடுங்க CM சார்! விஜய்க்காக மக்கள் ஆனந்த கண்ணீர்!
CM Vijay: ஓட்டுப்போட்டவங்க நம்பிக்கையை காப்பாத்திடுங்க CM சார்! விஜய்க்காக மக்கள் ஆனந்த கண்ணீர்!
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
Vijay resigned : எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
டாஸ்மாக்கிற்கு பூட்டு போடுவாரா விஜய்? - தவெக அரசுக்கு அன்புமணி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
டாஸ்மாக்கிற்கு பூட்டு போடுவாரா விஜய்? - தவெக அரசுக்கு அன்புமணி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!
CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!
CM Vijay: 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு - மேடையிலேயே முதல் நாள், முதல் கையெழுத்து போட்ட CM விஜய்
CM Vijay: 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு - மேடையிலேயே முதல் நாள், முதல் கையெழுத்து போட்ட CM விஜய்
TN Politics: கரையப்போகும் மூன்றாவது கட்சி எது? கம்யூ., காங்., வரிசையில் அதிமுகவா? TVK Vs DMK தானா?
கரையப்போகும் மூன்றாவது கட்சி எது? கம்யூ., காங்கிரஸ் வரிசையில் அதிமுகவா? TVK Vs DMK தானா?
Embed widget