மேலும் அறிய

"சமூக புரட்சி.. செஞ்சி காட்டுவோம்" பழைய ஃபார்முலாவை மீண்டும் கையில் எடுத்த ராகுல் காந்தி!

தெலங்கானாவில் சாதிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதை தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. இதை, சமூக நீதியை நோக்கிய புரட்சி என ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.

மக்களவை தேர்தலில் சாதி கணக்கெடுப்பு குறித்து தொடர் பிரச்சாரம் செய்து, குறிப்பிடத்தகுந்த வெற்றியை பதிவு செய்த ராகுல் காந்தி, மீண்டும் அதே ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார். தெலங்கானாவில் சாதிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதை தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டுக்கு வழிகாட்டிய தெலங்கானா:

சாதிய கணக்கெடுப்பு உள்பட பல வாக்குறுதிகளை அளித்து தெலங்கானாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், ஒவ்வொரு வாக்குறுதிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி, அங்கு சாதிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில், தெலங்கானாவின் மக்கள் தொகையில் 56.33 சதவிகிதத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரம்பை தெலங்கானா காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது. அரசு வேலைகள், கல்வி நிறுவனங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரம்பு 42ஆக உயர்த்த வழி செய்யும் இரண்டு மசோதாக்கள் தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட ராகுல் காந்தி, "தெலங்கானாவில் ஓபிசி இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக காங்கிரஸ் அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.

ராகுல் காந்தியின் பழைய ஃபார்முலா:

மாநிலத்தில் அறிவியல் பூர்வமான சாதி எண்ணிக்கை மூலம் பெறப்பட்ட ஓபிசி சமூகத்தினரின் உண்மையான எண்ணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் அவர்களின் சம பங்களிப்பை உறுதி செய்வதற்காக சட்டமன்றத்தில் 42% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இது உண்மையில் சமூக நீதியை நோக்கிய ஒரு புரட்சிகரமான படியாகும். இதன் மூலம் மாநிலத்தில் 50% இடஒதுக்கீடு என்ற சுவரும் இடிக்கப்பட்டுள்ளது. சாதி கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம், அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்யும் கொள்கைகள் வகுக்கப்படும். தெலுங்கானா அரசு இதற்காக ஒரு சுயாதீன நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது.

எக்ஸ்ரே மூலம் மட்டுமே - அதாவது சாதி கணக்கெடுப்பு மூலம் மட்டுமே - பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தங்கள் உரிய உரிமைகளைப் பெற முடியும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். தெலங்கானா வழி காட்டியுள்ளது. இதுதான் முழு நாட்டிற்கும் தேவை. இந்தியாவில் சாதி கணக்கெடுப்பு நிச்சயமாக நடக்கும் நாங்கள் அதைச் செய்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை சீசன்: தரிசனம் உறுதி, ஆன்லைன் அறைகள், ஏ.ஐ கூட்டக் கட்டுப்பாடு!
சபரிமலை சீசன்: தரிசனம் உறுதி, ஆன்லைன் அறைகள், ஏ.ஐ கூட்டக் கட்டுப்பாடு!
வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர் இருக்கலாம்? மீறினால் 7 ஆண்டுகள் சிறை!
வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர் இருக்கலாம்? மீறினால் 7 ஆண்டுகள் சிறை!
IRCTC புதிய தளம்: AI மூலம் டிக்கெட் உறுதி, முன்பதிவு இனி நொடியில்!
IRCTC புதிய தளம்: AI மூலம் டிக்கெட் உறுதி, முன்பதிவு இனி நொடியில்!
பெயிலில் வந்த போக்சோ கைதி..! மனைவி, 4 வயது & 18 மாத மகன்கள், 17 வயது சிறுமி, மூதாட்டி - 6 பேர் கொடூர கொலை
பெயிலில் வந்த போக்சோ கைதி..! மனைவி, 4 வயது & 18 மாத மகன்கள், 17 வயது சிறுமி, மூதாட்டி - 6 பேர் கொடூர கொலை

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Embed widget