மேலும் அறிய

DGP Appointment: மத்திய அரசுக்கு பதிலாக மாநிலமே டிஜிபியைத் தேர்வு செய்யலாம்; மசோதா நிறைவேற்றிய பஞ்சாப்

மத்திய அரசுக்கு பதிலாக மாநிலமே டிஜிபியைத் தேர்வு செய்யலாம் வகையில், பஞ்சாப் காவல்துறை சட்டத் திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசுக்கு பதிலாக மாநிலமே டிஜிபியைத் தேர்வு செய்யலாம் வகையில், பஞ்சாப் காவல்துறை சட்டத் திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. பஞ்சாப் விதான் சபா என்று அழைக்கப்படும் பஞ்சாப் சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில்,  பஞ்சாப் மாநிலமே டிஜிபியைத் தேர்ந்தெடுக்கும்.

டிஜிபி தேர்வு செய்யப்படுவது எப்படி?

பணி மூப்பு, தகுதி, திறமை உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மாநில அரசால் தேர்வு செய்யப்படுவர். அந்தப் பட்டியல் மத்திய அரசிடம் வழங்கப்படும். அதில் இருந்து 3 பேரை யூபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் தேர்வு செய்து, மாநில அரசிடம் வழங்குவர்.  இதில் இருந்து ஒருவர் மாநில அரசால், டிஜிபியாகத் தேர்வு செய்யப்படுவார்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மாநிலங்களே டிஜிபியைத் தேர்வு செய்வதற்கான பஞ்சாப் காவல்துறை சட்டத் திருத்த மசோதா நேற்று (ஜூன் 20) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில்,  பஞ்சாப் மாநிலமே டிஜிபியைத் தேர்ந்தெடுக்கும்.

பொறுப்பு டிஜிபி

பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் - ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. இக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பொறுப்பு டிஜிபி ஒருவர் ஆறு மாத காலத்துக்கு நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின்னர், டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை, மத்திய அரசிடம் பஞ்சாப் அரசு வழங்கவில்லை. 11 மாதமாக பொறுப்பு டிஜிபியே பதவியில் இருக்கிறார். 

இதையடுத்து உரிய அதிகாரிகளின் பட்டியலை வழங்குமாறு மத்திய அரசு பஞ்சாப் அரசிடம் கேட்டது. எனினும் டிஜிபி நியமனம் மாநில அரசுக்கு உரியது என்று தெரிவித்த பஞ்சாப் அரசு, மாநில அரசே டிஜிபியைத் தேர்ந்தெடுக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. 

முன்னதாக, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகள், டிஜிபியைத் தாங்களே நியமித்துக்கொள்ளும் மசோதாக்களை 2018ஆம் ஆண்டில் நிறைவேற்றின. மூன்றாவது மாநிலமாக பஞ்சாப்பும் இத்தகைய மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இதன்படி, மாநில அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்படும்.

இந்தக் குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில நீதிமன்றங்களின் ஓய்வுபெற்ற நீதிபதிகள், பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளர், பஞ்சாப் அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர், உள்துறை அமைச்சக செயலாளர், ஓய்வுபெற்ற டிஜிபி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இருப்பர். அவர்கள் தகுதி வாய்ந்த 3 பேர் கொண்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலைத் தேர்வு செய்து மாநில அரசிடம் கொடுப்பர். இதில் இருந்து ஒருவர் பஞ்சாப் மாநில அரசால், டிஜிபியாகத் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Embed widget