மேலும் அறிய

கைது பண்ணிட்டுதான் எல்லாமே ரெடி பண்ணாங்க.. நடந்தது இதுதான்.. கைதான நடிகை பரபர குற்றச்சாட்டு!

சரத்பவாரை ஊழல்வாதி என விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட நடிகை கேதகி சித்தாலே 39 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

சரத்பவாரை ஊழல்வாதி என விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட நடிகை கேதகி சித்தாலே 39 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். தனக்கு நடந்தது சட்டத்திற்கு புறம்பானது என்று கருத்து தெரிவித்துள்ளார். 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத்த் தலைவர் சரத்பவார். இவரைப் பற்றி  மராத்தி நடிகை கேதகி சித்தாலே என்பவர், தனது பேஸ்புக் பக்கத்தில், கடந்த மே மாதம் கருத்து ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில் சரத்பவார் ஒரு ஊழல்வாதி என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், நடிகை கேதகி சித்தாலே மீது காவல் துறையில் புகார் கொடுத்தனர். புகாரினை அடிப்படையாகக் கொண்டு, நடிகை கேதகி சித்தாலேவை விசாரணைக்கு நவிமும்பை கலம்பொலி காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். இதனை அறிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், நடிகை கேதகி சித்தாலே மீது மை வீசி தாக்குதலில் ஈடுபட முயன்றனர். பின்னர், அவரை விசாரித்த குற்றப்பிரிவு காவலர்கள்,  நடிகையை கைது செய்தனர். இதனால் 39 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டார் நடிகை கேதகி சித்தாலே. 

39 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, வெளியில் வந்த நடிகை கேதகி சித்தாலே, தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ”தனக்கு நடந்தது முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது. என்னை கைது செய்ய வந்தபோது போலிசாரிடம் முறையான வாரண்ட் இல்லை. மேலும் கைது செய்வதற்கான முகாந்திரமே இல்லாததால், உரிய ஆவணங்களே இல்லாமல் அழைத்துச் சென்று, அதன் பின்னர் என்னை சிறைப்படுத்துவதற்கான ஆவணங்களை தயார் செய்தனர். நான் சிறையில் இருந்து வரும்போது சிரித்துக் கொண்டு வந்தேன். அதற்காக இந்த சட்டப்போராட்டம் முடிவடைந்து விட்டது என்று இல்லை. நான் பெயிலில் தான் வெளிவந்திருக்கிறேன். என்மீது பதியப்பட்டுள்ள மொத்தம் 22 எஃப்.ஐ.ஆர்களில் ஒன்றுக்கு மட்டும் தான் பெயில் கிடைத்திருக்கிறது. மீதம் 21 புகார்கள் இன்னும் நிலுவையில் உள்ளது. மேலும் நான் எனது பதிவில் சரத்பவார் என, எங்கும் குறிப்பிடவில்லை. பவார் என்றே குறிப்பிட்டிருக்கிறேன். மக்கள் அதனை தவறாக திரித்து விட்டுள்ளனர், மேலும் மற்றவர்களை இழிவு செய்வது என்பது என்னுடைய நோக்கமில்லை. நான் சரத்பவார் என எங்கும் குறிப்பிடவில்லை, ஆனால் என்மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் சரத்பவாரை நான் அவ்வாறாக குறிப்பிட்டிருக்கிறேன் என்கிறார்கள், இப்போது இவர்கள் தான் சரத்பவார் ஊழல்வாதி என்கிறார்கள். காவல் துறை அலுவலக வளாகத்திற்குள் நான் இருக்கும் போது நான் தாக்கப்பட்டேன். நான் அவர்களுக்கு எதிராக புகாரளிக்க உள்ளேன்.  எனக்கு நடந்தது சட்டவிரோதம்” எனவும் குறிப்பிட்டார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget