மேலும் அறிய

தீ வைத்து கொளுத்தப்பட்ட காவல்நிலையம்...கலவரத்திற்கு வழிவகுத்த பழங்குடி சிறுமியின் கொடூர கொலை..!

மேற்குவங்க மாநிலம் கலியகஞ்ச் பகுதியில் பழங்குடி சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலித் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து வன்முறைகள் நடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. 

தீ வைத்து கொளுத்தப்பட்ட காவல்நிலையம்:

இந்த சூழ்நிலையில், மேற்குவங்க மாநிலம் கலியகஞ்ச் பகுதியில் பழங்குடி சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு வெடித்த வன்முறை அப்பகுதியை உலுக்கியது. 

பாதிக்கப்பட்ட பழங்குடி சிறுமியின் உடலை காவல்துறை அதிகாரி தரதரவென இழுத்து சென்ற வீடியோ மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமி கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.

இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் சிறுமி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையம் ஒன்றுக்கு மக்கள் தீ வைத்தனர். அதுமட்டும் இன்றி காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். நகரத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் லத்தி சார்ஜ் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை:

மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையைத் தூண்டியதாக பாஜக மீது குற்றம் சாட்டியது. மேலும், "இது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு எனக் கூறி அப்பாவி மக்களின் கோபத்தைத் தூண்டுவதாக பாஜக மீது" குற்றம் சாட்டியுள்ளது. பிரேதப் பரிசோதனையில், விஷப் பொருட்கள் உட்கொண்டதால் மரணம் நிகழ்ந்ததாக மேற்கு வங்க போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியகஞ்ச் நகரில் உள்ள குளத்தின் கரையில் வெள்ளிக்கிழமை காலை சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவத்தை விளக்கியுள்ள காவல்துறை தரப்பு, "உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் கங்குவா கிராமத்தில் வசிக்கும் சிறுமி, வியாழன் மாலை டியூஷனுக்குச் சென்றபோது காணாமல் போனார். உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் அவரது குடும்பத்தினரால் இரவு முழுவதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை" என தெரிவித்தனர்.

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, இது தொடர்பாக வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சில போலீஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் உடலை இழுத்துச் செல்வதைக் காண முடிந்தது. மைனர் பெண் ராஜ்போங்ஷி சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மகளிர் ஆணையம் (NCW), இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு மேற்கு வங்க காவல்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு நியாயமான விசாரணையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget