மேலும் அறிய

புதிய நாடாளுமன்றக் கட்டடப்பணிகள்.. நாடு திரும்பியதும் பார்வையிடச்சென்ற பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியுள்ளார். இந்நிலையில், தாயகம் திரும்பிய கையோடு நேற்று அவர் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பயணிகளைப் பார்வையிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியுள்ளார். இந்நிலையில், தாயகம் திரும்பிய கையோடு நேற்று அவர் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பயணிகளைப் பார்வையிட்டார். நேற்றிரவு சுமார் 8.45 மணி மணிக்கு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். சுமார் 1 மணி நேரம் அங்கிருந்த அவர், பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கட்டுமானப் பணிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.

ரூ.971 கோடி செலவு:

தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தின் அருகிலேயே இந்த புதிய கட்டிடமும் அமையவுள்ளது. சென்ட்ரல் விஸ்டா என்பது டெல்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி. இந்தப் பகுதியில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் உள்ளன. இதனைக் காண நாள்தோறும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். 

இந்நிலையில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் புனரமைக்க அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கும், தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.971 கோடி செலவாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளோ ஏற்கெனவே வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தில் தான் நாடாளுமன்றம் இருக்கிறது. இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கான அவசியம் என்னவென்று கூறி வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் பூமி பூஜைகள் நடத்தலாம் எனக் கூறியதோடு கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது. பின்னர் தடை நீக்கப்பட்டது. தற்போது எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அங்கே கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.


புதிய நாடாளுமன்றக் கட்டடப்பணிகள்.. நாடு திரும்பியதும் பார்வையிடச்சென்ற பிரதமர் மோடி..

விமர்சனம்..

தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமரும் வகையில் இருக்கை வசதிகள் உள்ளன. ஆனால், புதிய நாடாளுமன்றக் கட்டிடமானது மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரக்கூடிய வகையில் இடவசதியுடன் கட்டப்படுகிறது. புதிய கட்டிடத்தில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடத்தினால் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும். இதனால், பாஜக உ.பி. போன்ற பெரிய மாநிலங்களில் தனக்குள்ள செல்வாக்கை விஸ்தரிக்க இப்படியாக அவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தன்னை நிரந்தமராக ஆட்சியில் தக்கவைக்கும் சர்வாதிகார முயற்சியில் ஈடுபடுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


புதிய நாடாளுமன்றக் கட்டடப்பணிகள்.. நாடு திரும்பியதும் பார்வையிடச்சென்ற பிரதமர் மோடி..

அன்று படேல் சிலை; இன்று சென்ட்ரல் விஸ்டா:

உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமைபெற்ற சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை' நர்மதையாற்றின் கரையில் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்தச் சிலையை, சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த தினமான 2018 அக்டோபர் 31-ம் தேதி, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது. 182 மீட்டர் உயரமுள்ள இந்த சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாகும். இந்தச் சிலைக்கு ரூ.3000 கோடி செலவானது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
Embed widget