மேலும் அறிய

COP28: காலநிலை உச்சி மாநாடு.. இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி

இந்தாண்டுக்கான காலநிலை உச்சி மாநாடு துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய மாநாடு வரும் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மாறி வரும் காலநிலையால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஐநா சபையின் காலநிலை உச்சி மாநாடு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும். அந்த வகையில், இந்தாண்டுக்கான காலநிலை உச்சி மாநாடு துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய மாநாடு வரும் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய காலநிலை உச்சி நாநாடு: 

இதில், பல உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். உச்சி மாநாட்டில் இன்று கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, "வரும் 2028ஆம் ஆண்டு, 33ஆவது காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்வந்துள்ளோம். உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை 17 சதவீதம்.

ஆனால், உலகின் மொத்த கார்பன் வெளியேற்றத்தில் இந்தியா 4 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பங்கு வகித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையே பெரும் சமநிலையை ஏற்படுத்தும் வளர்ச்சியின் மாதிரியை இந்தியா உலகிற்கு வழங்கியுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு தீவிரத்தை 45 சதவிகிதம் குறைக்கவும், புதைபடிவமற்ற எரிபொருட்களின் பங்கை 50 சதவிகிதமாக அதிகரிக்கவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த நூற்றாண்டின் தவறுகளைத் திருத்திக் கொள்ள நமக்கு அதிக நேரம் இல்லை. காலக்கெடுவை விட 11 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அதன் கார்பன் உமிழ்வு தீவிர இலக்குகளை அடைந்துள்ளது. தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு இலக்குகளை அடையும் பாதையில் இந்தியா உள்ளது" என்றார்.

பிரதமர் மோடி பேசியது என்ன?

உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றி பிரதமர் மோடி, "கூட்டு முயற்சிகளால், உலக நலனுக்காக, அனைவரின் நலன்களையும் பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. என்னால் எழுப்பப்பட்ட காலநிலை நீதி, காலநிலை நிதி மற்றும் பசுமைக் கடன் போன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள்.

காலநிலை தணிப்புக்கும் தழுவலுக்கும் இடையேயான சமநிலையை பராமரிக்க வேண்டும். ஆற்றலை மாற்ற மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நியாயமாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்ற பணக்கார நாடுகள் முன்வர வேண்டும்" என்றார்.

கடந்தாண்டு, சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மையை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையைக் குறிக்கும் இரண்டு திட்டங்களை இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கத்தத்தின் இலக்கை பிரதிபலிக்கும் நோக்கில் பசுமை மானிய திட்டம் அறிவிக்கப்பட்டது. பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பில் வேரூன்றிய சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதேபோல, புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி நடவடிக்கை எடுத்து வரும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
Embed widget