மேலும் அறிய

காஷ்மீர் டூ கன்னியாகுமரி.. இனிமே ரயிலில் சாத்தியம்.. செம்ம மேட்டர் சொன்ன பிரதமர் மோடி

"'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை' என்று கூறி, பாரத அன்னையை நாங்கள் எப்போதும் ஆழ்ந்த பயபக்தியுடன் வணங்கி வருகிறோம். இன்று, நமது இந்திய ரயில்வே மூலம் ஒரு யதார்த்தமாகி இருக்கிறது"

ஒட்டு மொத்த இந்தியாவை இணைப்பதில் செனாப் ரயில் பாலம் புதிய மைல்கல் படைத்துள்ளதாகவும் காஷ்மீர் டூ கன்னியாகுமரி என்ற வார்த்தை பதம் தற்போது இந்திய ரயில்வே மூலம் சாத்தியமாகி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் டூ கன்னியாகுமரி:

ஜம்மு காஷ்மீருக்கு இன்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உலகின் உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தையும் பின்னர், அஞ்சி பாலத்தையும் திறந்து வைத்தார். பின்னர் பேசிய பிரதமர், "இன்று செனாப் மற்றும் அஞ்சி பாலங்களில் நடந்து செல்லும்போது, ​​இந்தியாவின் அபிலாஷைகளையும், நமது பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் திறமை மற்றும் தைரியத்தையும் நான் உணர்ந்தேன்.

'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை' என்று கூறி, பாரத அன்னையை நாங்கள் எப்போதும் ஆழ்ந்த பயபக்தியுடன் வணங்கி வருகிறோம். இன்று, நமது இந்திய ரயில்வே மூலம் ஒரு யதார்த்தமாகி இருக்கிறது. பிரான்சில் ஈபிள் கோபுரத்தைப் பார்க்க மக்கள் வருகிறார்கள். இந்தப் பாலம் அதை விட உயரமானது. இந்தப் பாலம் காஷ்மீரைப் பார்வையிட உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அது ஒரு சுற்றுலாத் தலமாகவும் மாறும்.

ஜம்மு-காஷ்மீரின் செழிப்புக்கான நுழைவாயில்களாக செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் செயல்படும். பிர் பஞ்சலின் செல்ல முடியாத மலைகளில் இந்தியாவின் சக்தியின் உயிருள்ள சின்னமாக செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் உள்ளன. இது, இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் கர்ஜனை. காஷ்மீரின் ஆப்பிள்கள் நாட்டின் பெரிய சந்தைகளுக்கு குறைந்த விலையிலும் சரியான நேரத்திலும் சென்றடைய முடியும்.

செம்ம மேட்டர் சொன்ன பிரதமர் மோடி:

பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி நிற்காது. இது, மோடியின் வாக்குறுதி. வளர்ச்சியை நிறுத்த நான் விடமாட்டேன். இளைஞர்கள் தங்கள் கனவுகளை அடைவதை எந்தத் தடையும் தடுக்க முடியாது. எந்தவொரு தடையும் முதலில் நரேந்திர மோடியை எதிர்கொள்ள வேண்டும்.

நமது அண்டை நாடு மனிதகுலத்திற்கு மட்டுமல்ல, சுற்றுலாவிற்கும் எதிரானது. அது ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பஹல்காம் தாக்குதல் இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு.

இது 'இன்சானியத் (மனிதநேயம்) மற்றும் காஷ்மீரியத்' மீதான தாக்குதல். இது, இந்தியாவில் கலவரங்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது. அதனால்தான் அவர்கள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்தனர்" என்றார்.

ஆற்றிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கட்டிடக்கலையின் அற்புதமான செனாப் ரயில் பாலம், உலகின் மிக உயரமான ரயில்வே எஃகு வளைவுப் பாலமாகும். இதன் நீளம் 1,315 மீட்டர். இது, நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு, ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். பாலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும். அஞ்சி பாலம் நாட்டின் முதலாவது கம்பிவழி ரயில் பாலமாகும். இது சவாலான சூழலில் நாட்டிற்கு பயன்பட உள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Embed widget