மேலும் அறிய

காஷ்மீர் டூ கன்னியாகுமரி.. இனிமே ரயிலில் சாத்தியம்.. செம்ம மேட்டர் சொன்ன பிரதமர் மோடி

"'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை' என்று கூறி, பாரத அன்னையை நாங்கள் எப்போதும் ஆழ்ந்த பயபக்தியுடன் வணங்கி வருகிறோம். இன்று, நமது இந்திய ரயில்வே மூலம் ஒரு யதார்த்தமாகி இருக்கிறது"

ஒட்டு மொத்த இந்தியாவை இணைப்பதில் செனாப் ரயில் பாலம் புதிய மைல்கல் படைத்துள்ளதாகவும் காஷ்மீர் டூ கன்னியாகுமரி என்ற வார்த்தை பதம் தற்போது இந்திய ரயில்வே மூலம் சாத்தியமாகி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் டூ கன்னியாகுமரி:

ஜம்மு காஷ்மீருக்கு இன்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உலகின் உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தையும் பின்னர், அஞ்சி பாலத்தையும் திறந்து வைத்தார். பின்னர் பேசிய பிரதமர், "இன்று செனாப் மற்றும் அஞ்சி பாலங்களில் நடந்து செல்லும்போது, ​​இந்தியாவின் அபிலாஷைகளையும், நமது பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் திறமை மற்றும் தைரியத்தையும் நான் உணர்ந்தேன்.

'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை' என்று கூறி, பாரத அன்னையை நாங்கள் எப்போதும் ஆழ்ந்த பயபக்தியுடன் வணங்கி வருகிறோம். இன்று, நமது இந்திய ரயில்வே மூலம் ஒரு யதார்த்தமாகி இருக்கிறது. பிரான்சில் ஈபிள் கோபுரத்தைப் பார்க்க மக்கள் வருகிறார்கள். இந்தப் பாலம் அதை விட உயரமானது. இந்தப் பாலம் காஷ்மீரைப் பார்வையிட உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அது ஒரு சுற்றுலாத் தலமாகவும் மாறும்.

ஜம்மு-காஷ்மீரின் செழிப்புக்கான நுழைவாயில்களாக செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் செயல்படும். பிர் பஞ்சலின் செல்ல முடியாத மலைகளில் இந்தியாவின் சக்தியின் உயிருள்ள சின்னமாக செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் உள்ளன. இது, இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் கர்ஜனை. காஷ்மீரின் ஆப்பிள்கள் நாட்டின் பெரிய சந்தைகளுக்கு குறைந்த விலையிலும் சரியான நேரத்திலும் சென்றடைய முடியும்.

செம்ம மேட்டர் சொன்ன பிரதமர் மோடி:

பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி நிற்காது. இது, மோடியின் வாக்குறுதி. வளர்ச்சியை நிறுத்த நான் விடமாட்டேன். இளைஞர்கள் தங்கள் கனவுகளை அடைவதை எந்தத் தடையும் தடுக்க முடியாது. எந்தவொரு தடையும் முதலில் நரேந்திர மோடியை எதிர்கொள்ள வேண்டும்.

நமது அண்டை நாடு மனிதகுலத்திற்கு மட்டுமல்ல, சுற்றுலாவிற்கும் எதிரானது. அது ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பஹல்காம் தாக்குதல் இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு.

இது 'இன்சானியத் (மனிதநேயம்) மற்றும் காஷ்மீரியத்' மீதான தாக்குதல். இது, இந்தியாவில் கலவரங்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது. அதனால்தான் அவர்கள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்தனர்" என்றார்.

ஆற்றிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கட்டிடக்கலையின் அற்புதமான செனாப் ரயில் பாலம், உலகின் மிக உயரமான ரயில்வே எஃகு வளைவுப் பாலமாகும். இதன் நீளம் 1,315 மீட்டர். இது, நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு, ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். பாலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும். அஞ்சி பாலம் நாட்டின் முதலாவது கம்பிவழி ரயில் பாலமாகும். இது சவாலான சூழலில் நாட்டிற்கு பயன்பட உள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
Annamalai Politics : அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
TVK Vijay: டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
CM Vijay Cabinet: சிஎம் விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
CM விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
Annamalai: கட்சியில் இருந்து நீக்கப்பட்டேனா.!! பிராடு அண்ணாமலை ரசிகர்கள் தான் காரணம்- கே.பி.ராமலிங்கம் பகீர் புகார்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டேனா.!! பிராடு அண்ணாமலை ரசிகர்கள் தான் காரணம்- கே.பி.ராமலிங்கம் பகீர் புகார்
Embed widget