மேலும் அறிய

"ரத்தம் கொதிக்குது.. மனசு வலிக்குது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி

ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது என்றும் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தங்கள் சொந்தத்தை இழந்தவர்களின் வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள் என்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பஹல்காம் தாக்குதல் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தங்கள் சொந்தத்தை இழந்தவர்களின் வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள்" என தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி:

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதத்தின் எஜமானர்களின் விரக்தியையும் கோழைத்தனத்தையும் காட்டுகிறது. காஷ்மீரில் அமைதி திரும்பிக் கொண்டிருந்தது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் துடிப்பு இருந்தது. வளர்ச்சிப் பணிகளில் முன்னெப்போதும் இல்லாத வேகம் இருந்தது. ஜனநாயகம் வலுவடைந்து வந்தது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சாதனை படைக்கப்பட்டது. வருமானம் அதிகரித்து வந்தது. இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வந்தன. நாட்டு மக்களுக்கும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் எதிரிகளாக இருப்பவர்களுக்கு இது பிடிக்கவில்லை.

"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்"

பஹல்காம் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் வேதனைப்படுத்தியுள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்கள் பேசும் மொழி எதுவாக இருந்தாலும் சரி. அவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதலின் படங்களைப் பார்க்கும்போது ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது என்று நான் உணர்கிறேன்.

துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும். பயங்கரவாதிகளும் அவர்களின் எஜமானர்களும் காஷ்மீரை அழிக்க விரும்புவதால் இந்த சதித்திட்டத்தை தீட்டினர்.

 

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமை மிகப்பெரிய பலமாகும். இந்த ஒற்றுமைதான் பயங்கரவாதத்திற்கு எதிரான நமது தீர்க்கமான போரின் அடிப்படை. இந்த சவாலை எதிர்கொள்ள நமது கொள்கைகளை வலுப்படுத்த வேண்டும். ஒரு தேசமாக நமது மன உறுதியைக் காட்ட வேண்டும். நாடு எவ்வாறு ஒரே குரலில் பேசுகிறது என்பதை முழு உலகமும் கவனித்துக் கொண்டிருக்கிறது" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Embed widget