மேலும் அறிய

15 ஆயிரம் தடுப்பூசிகளை செலுத்திய ஒரே நர்ஸ்.. நேரில் சந்தித்த பிரதமர்.. யார் இந்த செவிலியர்?

டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, செவிலியர் க்றிஸ்டினாவுடன் சிறிது நேரம் பேசிய பிறகு, சமூக வலைத்தளங்களில் அவர் வைரலாகியுள்ளார்.

புதுடெல்லியின் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் பணியாற்றும் 26 வயது செவிலியரான க்றிஸ்டினா வெறும் சில மணி நேரங்களில் சமூக வலைத்தளங்களில் பெரிதும் கொண்டாடப்படும் நபராக மாறினார். 100 கோடி கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்தியதாக இந்திய அரசு அறிவித்த நிலையில், அதில் அவருக்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது என்பதற்காக க்றிஸ்டினா பாராட்டுகளைப் பெற்று வருகிறார். 

கடந்த ஓராண்டாக கொரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் க்றிஸ்டினா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஐ.சி.யூவில் வைக்கப்பட்டிருந்த போதும் அங்கு பணியாற்றியுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த க்றிஸ்டினா இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைச் செலுத்தி சாதனை படைத்துள்ளார். 

கடந்த அக்டோபர் 23 அன்று, 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதற்கு மருத்துவப் பணியாளர்களுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, செவிலியர் க்றிஸ்டினாவுடன் சிறிது நேரம் பேசிய பிறகு, சமூக வலைத்தளங்களில் பலரும் க்றிஸ்டினாவைப் பாராட்டத் தொடங்கினர். 

15 ஆயிரம்  தடுப்பூசிகளை செலுத்திய ஒரே நர்ஸ்.. நேரில் சந்தித்த பிரதமர்.. யார் இந்த செவிலியர்?

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள க்றிஸ்டினா, `பிரதமர் மோடி என்னை நேர்காணல் எடுத்தது போல எனக்குத் தோன்றியது. அவர் தடுப்பூசி குறித்தும், அதனைச் செலுத்திக் கொள்ளும் போது மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்தும் என்னிடம் கேட்டார்’ என்று கூறியுள்ளார். `இது ஒரு நீண்ட பயணம்; எனினும் இது திருப்திகரமானது. இன்றுவரை 15 ஆயிரம் தடுப்பூசிகளைச் செலுத்தியதற்காக நான் பெருமிதம் கொள்கிறேன். தொடக்க காலத்தில் மக்கள் தயக்கத்துடன் இருந்தனர். எனினும் சில நாள்களில் பலரும் முன்வந்தனர். அதற்கு முன்னால் இருந்த தயக்கம் மறைந்து, தடுப்பூசி மீதான நம்பிக்கை அதிகரித்த பிறகு மக்களும் ஒத்துழைப்பு தந்தனர்’ என்று கூறியுள்ளார். 

`நான் பிரதமர் மோடியிடன் இந்தப் பணி எவ்வளவு சவாலாக இருந்தது என்பதை எடுத்துக் கூறினேன். மருத்துவமனை வரை வந்து தடுப்பூசி எடுக்க பயந்த மக்களிடம் நாங்கள் ஆலோசனை கூறினோம். இத்தனை சவால்களைக் கடந்து நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்றியதால், நாங்கள் எப்போதும் உற்சாகத்துடன் பணியாற்றினோம்’ என்றும் செவிலியர் க்றிஸ்டினா கூறியுள்ளார். 

15 ஆயிரம்  தடுப்பூசிகளை செலுத்திய ஒரே நர்ஸ்.. நேரில் சந்தித்த பிரதமர்.. யார் இந்த செவிலியர்?

பிரதமர் மோடியிடம் தான் மணிப்பூரைச் சேர்ந்தவர் என்று கூறிய போது, அவர் க்றிஸ்டினாவின் சொந்த ஊர் குறித்தும், தனது கல்வி குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 26 வயதான க்றிஸ்டினா தனது குடும்பத்தில் இருந்து மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்த முதல் பெண். மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தைச் சேர்ந்த க்றிஸ்டினா சொந்த மாநிலத்தில் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, பாட்னா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் பணியில் சேர்வதற்கு முன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 

இந்தச் சந்திப்பில் பிரதமர் மோடியுடன் மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கலந்துகொண்டார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget