மேலும் அறிய

"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!

வங்கதேச ஊடுருவல்காரர்களின் வாக்குகளை பெற, ஜார்க்கண்ட் முழுவதும் அவர்களை குடியேற்றி வருவதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு மீது பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார்.

ரொட்டியையும் பெண்களையும் மண்ணையும் வங்கதேச குடியேறிகள் களவாடுவதாக ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசி இருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இஸ்லாமியர்கள் குறித்து பாஜக மூத்த தலைவர்கள் சர்ச்சை கருத்து தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட பிரதமர் தொடங்கி பாஜகவினர் பலரும் இஸ்லாமியர்கள் குறித்து பேசிய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி:

கடந்த தேர்தல்களை போல ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலிலும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை மையப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதை பாஜக வியூகமாக வகுத்திருக்கிறது. ஜார்க்கண்ட மாநில பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரும் அஸ்ஸாம் முதலமைச்சருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, இலங்கைக்கு அனுமன் தீ வைத்தது போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊடுருவியவர்களுக்கு தீ வைப்போம் என தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய பிரச்சாரத்தில் பிரதமர் மோடியும் சர்ச்சையாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள், இங்கிருக்கும் ரொட்டியையும் பெண்களையும் மண்ணையும் களவாடுவதாக தெரிவித்துள்ளார்.

வெறுப்பு பேச்சா?

கர்வா நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர், "ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி அரசு, வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த அரசு, சமாதான அரசியலை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த கட்சிகள் மாநிலத்தின் சமூக நல்லிணக்கத்தை குலைத்து வருகின்றன. வங்கதேச ஊடுருவல்காரர்களின் வாக்குகளை பெற, ஜார்க்கண்ட் முழுவதும் அவர்களை குடியேற்றி வருகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், "சரஸ்வதி வந்தனா ஸ்லோகத்தை பள்ளிகளில் அனுமதிக்கவில்லை என்றால், ஆபத்து எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். திருவிழாக்களில் கல் வீச்சு நடந்தால், துர்கா மாதாவை தடுத்து நிறுத்தி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் போது, ​​அது எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிவீர்கள்.

 

ஊடுருவல் விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்று நிர்வாகம் மறுக்கும் போது, ​​அரசு இயந்திரத்திலும் ஊடுருவல் நடந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. ரொட்டியையும் பெண்களையும் மண்ணையும் வங்கதேச ஊடுருவல்காரர்கள் களவாடி செல்கின்றனர்" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget