மேலும் அறிய

SVAMITVA: சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?

SVAMITVA Scheme: இந்தியாவில் கிராமப்புற நிலத்தின் கணக்கெடுப்பும்  தகராறுகளுக்கு தீர்வு காண்பதும் வகையில் ஸ்வமித்வா திட்டம் உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் என்ன பயன்...

இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான திட்டமாக கூறப்படும் ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்குதலை நாளை (2025, ஜனவரி 18) பிற்பகல் 12.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம்  பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிக்கின்றார்.

ஸ்வமித்வா திட்டம் எதற்கு? 

பல தசாப்தங்களாக, இந்தியாவில் கிராமப்புற நிலத்தின் கணக்கெடுப்பும்  தகராறுகளுக்கு தீர்வு காண்பதும் முழுமையடையாமல் இருந்தது. பல மாநிலங்கள் கிராமங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளை  வரைபடமாக்கவோ அல்லது ஆவணப்படுத்தவோ தவறிவிட்டன. சட்ட ஆவணங்கள் இல்லாத நிலையானது இந்தப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்களை முறையான பதிவுகள் இல்லாதவர்களாகச ஆக்கியுள்ளது. இது அவர்கள் தங்கள் வீடுகளை மேம்படுத்த நிறுவன கடன் பெற அணுகுவதையோ அல்லது கடன்கள் மற்றும் பிற நிதி உதவிகளுக்கான அடமான சொத்தாக தங்கள் சொத்துக்களை பயன்படுத்துவதையோ தடுக்கிறது. பொருளாதார அதிகாரமளித்தலுக்கு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சொத்து ஆவணங்களின் இன்றியமையாத முக்கியத்துவத்தை உணர்ந்து ஸ்வமித்வா திட்டம் உருவாக்கப்ப ட்டது.

Also Read: அனல் பறக்கும் டெல்லி தேர்தல்: ஆண்களுக்கும் இலவச பேருந்து: பாஜக-காங்கிரசுக்கு செக் வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்.!

ட்ரோன் தொழில்நுட்பம்:

அண்மைக்கால ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களில் கணக்கெடுப்பு செய்து வீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ‘உரிமைகளின் பதிவு’ வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் தொலைநோக்குடன் ஸ்வமித்வா திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 3.17 லட்சம் கிராமங்களில்  ட்ரோன் மூலம்  நில ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டிருப்பது ஸ்வமித்வா திட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சொத்துகளை பணமாக்குவதற்கும், வங்கிக் கடன்கள் பெற்று அதன் மூலம் நிதிநிறுவனக் கடனை அடைப்பதற்கும், சொத்து தொடர்பான தகராறுகளைக் குறைப்பதற்கும், கிராமப்புறங்களில் சொத்துகள் மற்றும் சொத்து வரியை சிறந்த முறையில் மதிப்பீடு செய்வதற்கும் கிராம அளவில் விரிவான திட்டமிடலை செயல்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Also Read: TN Rain: தமிழ்நாட்டை துரத்தும் கனமழை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை புது அப்டேட்.!

65 லட்சம் அட்டைகள்

ஸ்வமித்வா சொத்து அட்டைகளானது சத்தீஷ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோராம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் கிராமங்களுக்கான 65 லட்சத்துக்கும் அதிகமான ஸ்வமித்வா சொத்து அட்டைகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளன. ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், தயாரிக்கப்பட்டுள்ள சுமார் 2.25 கோடி சொத்து அட்டைகளில் ஒரே நாளில் 65 லட்சம் சொத்து அட்டைகள் வழங்கப்படுவது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும்.


நாளைய நிகழ்வின் போது, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுடன்  பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடுவதோடு, நாட்டு மக்களுக்கும் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல்  பஞ்சாய்த்து ராஜ்  செயலாளர் விவேக் பரத்வாஜ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மேலும் பல மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், சம்பந்தப்பட்ட துறையின் மாநில/ யூனியன் பிரதேச  அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், பஞ்சாயத்து பிரதிநிதிகள் இணைய வழியில் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
Embed widget