மேலும் அறிய

தரையில் தூங்கி சாத்வீகமான உணவு உண்ணும் பிரதமர் மோடி.. ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு விரதம்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு 11 நாள்களுக்கு சிறப்பு விரதம் இருக்க தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். 

சிறப்பு விரதம் இருக்கும் பிரதமர் மோடி:

இதற்காக 11 நாள்களுக்கு சிறப்பு விரதம் இருக்க தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி. தரையில் தூங்குவது, கடவுளிடம் பிரார்த்தனை செய்ய அதிகாலையில் எழுந்திருப்பது, மந்திரம் ஓதுவது, தியானம் செய்வது, உடற்பயிற்சி செய்வது, சிறிது நேரம் மௌன விரதம் இருப்பது, சாத்வீக உணவுகளை மட்டும் உண்பது, மத நூல்களைப் படிப்பது, தூய்மையைப் பேணுவது, சொந்த வேலைகளை தானே செய்வது என பல வகையான கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகிறார் பிரதமர் மோடி.

நேற்று முன்தினம், நாசிக்கின் பஞ்சவடி பகுதியில் கோதாவரி கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ கலா ராமர் கோயிலில் பிரார்த்தனை செய்து பிரதமர் மோடி, தனது அனுஷ்டானத்தைத் தொடங்கினார். இந்த கோயில், ராமர் வாழ்வில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. 

ராமாயணத்தில் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பும் ராமரை பற்றி எடுத்துரைக்கும் யுத்த காண்டம் தொடர்பான கதா காலட்சேபத்தை கேட்பதையும் பஜனை பாடல்களை பாடுவதையும் விரதத்தின் ஒரு அங்கமாக பிரதமர் மோடி செய்து வருகிறார். அதுமட்டும் இன்றி, கோயிலில் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தரையில் தூங்கி சாத்வீகமான உணவு உண்ணும் பிரதமர் மோடி:

பிரதமர் மோடியின் விரதம் குறித்து விரிவாக பேசிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மஹந்த் நவல் கிஷோர் தாஸ், "அனுஷ்டானத்தின் போது, ​​முடிந்தால், தரையில் தூங்கலாம். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, குளித்துவிட்டு, கடவுள் முன் விளக்கேற்றி தியானம் செய்ய வேண்டும். கடவுளை வழிபட வேண்டும்.

ஒரு அனுஷ்டானம் என்பது குறைந்த பட்சம், பழங்களை மட்டுமே உண்ண வேண்டும். அதிகபட்சம், சாத்வீக உணவை உண்ண வேண்டும்.  இந்த காலகட்டத்தில் ஒருவர் அமைதியாக இருக்க வேண்டும். ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு கடவுளுக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும். தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதுகுறித்து ஆன்மீக குரு சுவாமி தீபங்கர் கூறுகையில், "அனுஷ்டானத்தின் போது சிறிது நேரம் மெளன விரதம் இருந்து,  சுந்தரகாண்டத்தை வாசிக்கலாம். ராமரின் ஜபம் செய்யலாம். யாகத்தில் ஈடுபடலாம். அனுஷ்டானத்தின் போது ஒரு குறிப்பிட்ட முறையில் தூங்கி உட்கார வேண்டும். இது சடங்குகளின் ஒரு அங்கம். அனுஷ்டான காலத்தில் ஒருவர் முடி அல்லது நகங்களை வெட்டக்கூடாது" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget