மேலும் அறிய

PM CARES: பிஎம் கேர்ஸ் நிதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொருந்தாது- மத்திய அரசு தகவல்

பிஎம் கேர்ஸ் நிதியானது தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

பிஎம் கேர்ஸ் நிதியின் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கோரும் மனு மீது மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இது குறித்தான மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கையில்,

பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரண (பி.எம்.கேர்ஸ்) நிதிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது, ஏனெனில் இந்த சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட "பொது ஆணையமாக" அறக்கட்டளை தகுதி பெறவில்லை என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்  தெரிவித்துள்ளது.

சட்டமன்றத்தால் உருவாக்கப்படவில்லை:

பி.எம் கேர்ஸ் நிதி இந்திய அரசியலமைப்பின் கீழ் அல்லது நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தாலும் உருவாக்கப்படவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த அறக்கட்டளை உண்மையில் எந்தவொரு அரசாங்கத்திற்கும் அல்லது அரசாங்கத்தின் எந்தவொரு சார்பிற்கோ சொந்தமானதாகவோ, கட்டுப்படுத்தப்பட்டதாகவோ அல்லது நிதியளிக்கப்பட்டதாகவோ இல்லை. அறக்கட்டளையின் செயல்பாடுகளில் மத்திய அரசோ அல்லது எந்த மாநில அரசுகளோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது.

வெளிப்படைத்தன்மைக் கோரும் மனு

பிஎம் கேர்ஸ் நிதியின் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கோரும் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு பக்க பதிலை தாக்கல் செய்தது.இது நீதிமன்றத்தை அதிருப்தியில் ஆழ்த்தியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த பதிலைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட விரிவான பிரமாணப் பத்திரம் இதுவாகும்.

மத்திய உள்துறை அமைச்சரும், மத்திய நிதியமைச்சரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டா ஆகியோரும் பி.எம்.கேர்ஸ் நிதியின் அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

பி.எம் கேர்ஸ் நிதி ஒரு அரசாங்க நிதியாக முன்னிறுத்தப்பட்டுள்ளது என்றும், "துணை ஜனாதிபதி போன்ற அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மாநிலங்களவை உறுப்பினர்களை நன்கொடை வழங்குமாறு கோரியுள்ளனர்" என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டாலும், பி.எம் கேர்ஸ் நிதியை "பொது அறக்கட்டளை" என்று அழைக்கும் வாதத்தை அரசாங்கம் எதிர்த்தது, இது தன்னார்வ நன்கொடைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது என்றும் மத்திய அரசு வாதம் வைத்தது.

பிஎம் கேர்ஸ் நிதி என்பது மத்திய அரசின் வேலை அல்ல, அதிலிருந்து நிதி அல்லது நிதியைப் பெறவில்லை. "பி.எம் கேர்ஸ் நிதி பி.எம்.என்.ஆர்.எஃப் பாணியில் நிர்வகிக்கப்படுகிறது, ஏனெனில் இரண்டும் பிரதமரால் தலைமை தாங்கப்படுகின்றன," என்று அது கூறியது.

ஏப்ரல் 1, 2020 அன்று அமைக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியானது,  கோவிட் -19 தொற்று போன்ற அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்க நன்கொடைகளைப் பெறுகிறது என கூறப்படுகிறது.

Also Read: Economic Survey 2023: பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்….

தலைப்பு செய்திகள்

இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் - நடந்தது என்ன?
இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் - நடந்தது என்ன?
Train Ticket Booking: மாற்றம் பெறும் டிக்கெட் முன்பதிவு.. ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!
Train Ticket Booking: மாற்றம் பெறும் டிக்கெட் முன்பதிவு.. ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!
Top 10 News Headlines: வட இந்தியாவில் சூரிய வெடிப்பு.. யூட்யூபர் மாரிதாஸ் கைது.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 News Headlines: வட இந்தியாவில் சூரிய வெடிப்பு.. யூட்யூபர் மாரிதாஸ் கைது.. 11 மணி வரை நடந்தது என்ன?
Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
Embed widget