நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. தேதியை அறிவித்த அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ! முக்கிய விவாதங்கள், எதிர்பார்ப்புகள் என்ன?
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் தேதிகள் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக கிரண் ரிஜிஜு X இல் பதிவிட்டார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1 முதல் 19 வரை நடைப்பெறவுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்தார்.
ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்
நாடாளுமன்ற அலுவல்களுக்கு உட்பட்டு நடத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தப்பின் இந்த அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்தார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் தேதிகள் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக கிரண் ரிஜிஜு X இல் பதிவிட்டார்.
The Hon’ble President of India Smt. Droupadi Murmu ji has approved the proposal of the Government to convene the #WinterSession of #Parliament from 1st December 2025 to 19th December, 2025 (subject to exigencies of Parliamentary business).
— Kiren Rijiju (@KirenRijiju) November 8, 2025
Looking forward to a constructive &… pic.twitter.com/QtGZn3elvT
முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு:
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உடனடியாக நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பதால் இது மிக முக்கியமானதாக இருக்கும். இந்த முறையும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது
குறிப்பாக நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மற்றும் ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் நடந்ததாகக் கூறப்படும் வாக்கு மோசடி பிரச்னை ஆகியவற்றில் எதிர்க்கட்சிகள் நிச்சயமாக கேள்வி எழுப்பும். SIR இன் முதல் கட்டம் பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்டு அங்கு தேர்தலானது முதற் கட்டமாக முடிந்துள்ளத்து.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படக்கூடிய மசோதாக்களில் அரசியலமைப்பு (நூற்று முப்பதாவது திருத்தம்) மசோதா, 2025, யூனியன் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா, 2025, மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2025 ஆகியவை அடங்கும்.
மழைக்கால கூட்டத்தொடர்:
கடைசியால நடந்த நாடாளுமன்றக் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்றது. 32 நாட்களில் 21 அமர்வுகள் நடைபெற்றன, இதில் 15 மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டன. ஆனால் மூன்றில் ஒரு பங்கு கூட்டம் மட்டுமே சரியாக நடந்தது. மற்ற நேரங்களில் எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது.






















