மேலும் அறிய

தேர்தல் நேரம்! பயங்கரவாதிகளுக்கு எதிராக கொந்தளித்த ராஜ்நாத் சிங் - எதிர்வினையாற்றிய பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகளை கொல்வோம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் தெரிவித்த கருத்துக்கு அந்நாடு கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் 14 நாள்களே உள்ள நிலையில், இந்திய அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

பாகிஸ்தானுக்குள் புகுந்து சம்பவம் செய்த இந்தியா?

இப்படிப்பட்ட சூழலில், பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகளை கொல்வோம் என பாஜக மூத்த தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் புகுந்து 20 பயங்கரவாதிகளை இந்திய புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் கொன்றதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டிருந்தது.

தனியார் செய்தி நிறுவனத்துடனான நேர்காணலின்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "அண்டை நாட்டிலிருந்து வரும் பயங்கரவாதிகள் பாரதத்தில் அமைதியை குலைக்க முயன்றாலோ அல்லது பாரதத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றாலோ அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்.

பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டால், அவர்களைக் கொல்ல பாகிஸ்தானுக்குள் நுழைவோம். பிரதமர் கூறியது முற்றிலும் உண்மை. இந்தியாவுக்கு அந்த பலம் உள்ளது. பாகிஸ்தானும் இதை உணரத் தொடங்கியுள்ளது" என்றார்.

ராஜ்நாத் சிங்குக்கு பாகிஸ்தான் பதிலடி:

ராஜ்நாத் சிங் கருத்துக்களுக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தந்த பதிலடியில், "மிகையான தேசியவாத உணர்வுகளை தூண்ட வெறுப்பு பேச்சு பேசுவது இந்திய அரசாங்கத்திற்கு வழக்கமாகிவிட்டது. எந்த வித கூச்ச நாச்சமும் இன்றி தேர்தல் ஆதாயத்திற்காக இம்மாதிரியான செயல்களை செய்கிறது. பாகிஸ்தான் குடிமக்களை பயங்கரவாதிகள் என தன்னிச்சையாக அறிவித்து, அவர்களை சட்ட விரோதமாக கொல்ல தயாராக இருப்பதாக இந்தியாவே ஒப்பு கொண்டுள்ளது. இந்தியாவின் கொடூரமான, சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தங்கள் நாட்டில் புகுந்து பாகிஸ்தான் குடிமக்கள் இருவரை சட்டவிரோதமாக கொன்றதாக அந்நாட்டு வெளியுறவு செயலாளர் முஹம்மது சைரஸ் சஜ்ஜாத் காசி கடந்த ஜனவரி மாதம் பகீர் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.

பாகிஸ்தானுக்கு பதிலடி அளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "தவறான தகவல்களை பரப்பி, உள்நோக்கம் கொண்ட இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் இந்த கருத்து அதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு.  

பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் நீண்ட காலமாக இருந்து வருகிறது. நாடுகடந்த சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிக்க: தேர்தலை தங்களுக்கு சாதகமாக மாற்ற சீனா சதி! இந்திய வாக்காளர்களை AI மூலம் குழப்ப முயற்சி - பகீர் ரிப்போர்ட்

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
Marakkanam To Puducherry: 20 நிமிஷம் தான் - மரக்காணம் டூ புதுச்சேரி 4 வழிச்சாலை  - ரூ.2,157 கோடி, சென்னை டூ நாகை இனி ஈசி
Marakkanam To Puducherry: 20 நிமிஷம் தான் - மரக்காணம் டூ புதுச்சேரி 4 வழிச்சாலை - ரூ.2,157 கோடி, சென்னை டூ நாகை இனி ஈசி
Raksha Bandhan 2025 Wishes: அண்ணன்.. எங்க அண்ணன்.. இன்று ரக்ஷா பந்தன்..! இந்த வாழ்த்துகளை உடனே அனுப்புங்க..!
Raksha Bandhan 2025 Wishes: அண்ணன்.. எங்க அண்ணன்.. இன்று ரக்ஷா பந்தன்..! இந்த வாழ்த்துகளை உடனே அனுப்புங்க..!
தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டுநர்களே உஷார்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போலீஸ்!
தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டுநர்களே உஷார்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
Anbumani Rmadoss: அப்செட்டில் ராமதாஸ் - தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் - இன்று பாமக பொதுக்குழு
Marakkanam To Puducherry: 20 நிமிஷம் தான் - மரக்காணம் டூ புதுச்சேரி 4 வழிச்சாலை  - ரூ.2,157 கோடி, சென்னை டூ நாகை இனி ஈசி
Marakkanam To Puducherry: 20 நிமிஷம் தான் - மரக்காணம் டூ புதுச்சேரி 4 வழிச்சாலை - ரூ.2,157 கோடி, சென்னை டூ நாகை இனி ஈசி
Raksha Bandhan 2025 Wishes: அண்ணன்.. எங்க அண்ணன்.. இன்று ரக்ஷா பந்தன்..! இந்த வாழ்த்துகளை உடனே அனுப்புங்க..!
Raksha Bandhan 2025 Wishes: அண்ணன்.. எங்க அண்ணன்.. இன்று ரக்ஷா பந்தன்..! இந்த வாழ்த்துகளை உடனே அனுப்புங்க..!
தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டுநர்களே உஷார்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போலீஸ்!
தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டுநர்களே உஷார்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போலீஸ்!
EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
Coolie Booking: சூப்பர்ஸ்டார்னா சும்மாவா.. மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்த கூலி டிக்கெட் - அதிரவிடும் ரசிகர்கள்
Coolie Booking: சூப்பர்ஸ்டார்னா சும்மாவா.. மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்த கூலி டிக்கெட் - அதிரவிடும் ரசிகர்கள்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Embed widget