'ஜெய் ஶ்ரீ ராம்' சொல்லு என சிறுவனின் தொடையை கிழித்த கும்பல்...பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பால் தூண்டப்பட்டதா பஹல்காம் தாக்குதல் ?
Pahalgam Attack : பாஜக அரசின் கீழ் அரங்கேறிய தொடர் இஸ்லாமிய தாக்குதல்களே பஹல்காமில் அப்பாவி மக்களின் கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்
பஹல்காமில் தீவிரவாதிகளில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ள நிகழ்வு ஒட்டுமொத்த உலகையே அதிச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளிடம் அவர்களின் மதத்தை கேட்டு ஒவ்வொருவராக சுட்டுக் கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
காஷ்மீர் மாநிலம், பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நேற்று மாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.
மேலும் கான்பூரைச் சேர்ந்த சுபம் துவிவேதி என்பவரை தீவிரவாதிகள் கல்மா படிக்கச் சொல்லி சுட்டுக் கொன்றுள்ளார்கள். அவரை கொன்றபின் நாங்கள் என்ன செய்தோம் என்று போய் சொல் என சுபமின் மனைவியிடம் கூறியுள்ளார்கள். இதேபோல் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் ' மோடியிடம் போய் சொல் ' என தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் கூறியதாக சம்பவ இடத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கான்பூரில் இஸ்லாமிய சிறுவன் தாக்கப்பட்டது
பஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு ஒரு சில நாட்கள் முன்பாக கான்பூரில் இஸ்லாமிய சிறுவன் ஒருவன் இந்துத்துவ கும்பலால் தாக்குதலுக்கு ஆளானது குறிப்பிடத் தக்கது. கான்பூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனை மடக்கிய இந்துத்துவ கும்பல் 'ஜெய் ஶ்ரீ ராம் ' என்கிற கோஷத்தை சொல்லும்படி நிர்பந்தித்துள்ளார்கள். அவர்கள் சொன்னதை செய்யாததால் கண்ணாடித் துண்டால் சிறுவனின் தொடையை கிழித்துள்ளார்கள். இதே போல் இந்தியா முழுவது பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.
பாஜக இஸ்லாமிய வெறுப்புதான் காரணமா ?
பஹல்காம் தாக்குதலுக்குப் பின் இந்துத்துவ அமைப்புகள் சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை பரப்பி வருகிறார்கள். ஆனால் பாஜக அரசின் கீழ் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடந்து வரும் வன்முறையே தற்போது இந்துக்களுக்கு எதிரான வன்முறையாக வெடித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இஸ்லாமியர்களை 'ஜெய் ஶ்ரீ ராம் ' என்று சொல்ல கட்டாயப்படுத்தி நிகழ்த்தப்பட்ட வன்முறையைப் போலவே பஹல்காமில் இஸ்லாமிய வாக்கியங்களை சொல்லும்படி தீவிரவாதிகள் கேட்டுள்ளார்கள் என்பது கவனிக்கத் தக்கது.
Before You Go
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
ட்ரெண்டிங் செய்திகள்





















