மேலும் அறிய

Drugs Free India: இதுக்கு தயவு தாட்சண்யமே இல்ல.. அமித் ஷா முன்னிலையில் போதை பொருளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க, போதைப்பொருளுக்கு எதிரான கொள்கையை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.

போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: 

நாட்டில் நடக்கும் பல பிரச்னைகளுக்கு போதை பொருள் பயன்பாடே காரணமாக உள்ளது. உடல் ரீதியாக மட்டும் இன்றி உளவியல் ரீதியாகவும் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதனால், போதை பொருளுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நாளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2,416 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.44 லட்சம் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் அழிக்கப்பட உள்ளது.

அமித் ஷா முன்னிலையில் நடக்கப்போகும் சம்பவம்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் போதைப் பொருட்கள் அழிக்கப்பட உள்ளது. காணொளி காட்சி வாயிலாக அவர்,  இதனை கண்காணிக்க உள்ளார். 'போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்பு' என்ற தலைப்பில் நாளை டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள அமித் ஷா, வீடியோ கான்பரன்சிங் மூலமாக பல்வேறு நகரங்களில் போதைப்பொருள்கள் அழிக்கப்படவிருப்பதை பார்க்க உள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவால் (என்சிபி) கைப்பற்றப்பட்ட 6,590 கிலோவும், இந்தூர் பிரிவினால் பறிமுதல் செய்யப்பட்ட 822 கிலோவும், ஜம்மு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 356 கிலோவும் நாளை அழிக்கப்படும் போதைபொருள்களில் அடங்கும்.

இதனுடன், பல்வேறு மாநிலங்களின் செயல்பட்டு வரும் போதை பொருள் தடுப்பு பிரிவும் போதைப்பொருட்களை அழிக்க உள்ளது. அசாமில் 1,486 கிலோ போதைப்பொருளும் சண்டிகரில் 229 கிலோவும் கோவாவில் 25 கிலோவும் குஜராத்தில் 4,277 கிலோவும் ஹரியானாவில் 2,458 கிலோவும் ஜம்மு-காஷ்மீரில் 4,069 கிலோவும் மத்திய பிரதேசத்தில் 1,03,884 கிலோவும் மகாராஷ்டிராவில் 159 கிலோ, திரிபுராவில் 1,803 கிலோவும் உத்தரபிரதேசத்தில் 4,049 கிலோவும் அழிக்கப்பட உள்ளது.

"போதைப்பொருள் இல்லாத இந்தியா"

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க, போதைப்பொருளுக்கு எதிரான கொள்கையை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் 1ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி வரை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அனைத்து பிராந்திய பிரிவுகளும், மாநிலங்களில் இயங்கி வரும் போதைப்பொருள் தடுப்புப் படைகளும் கூட்டாக சுமார் 8,76,554 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 9,580 கோடி ரூபாயாகும். இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 11 மடங்கு அதிகம்.

நாளை அழிக்கப்பட உள்ள போதைப் பொருளையும் சேர்த்து, கடந்த ஒரு வருடத்தில் அழிக்கப்பட்ட மொத்த போதை பொருளின் அளவு சுமார் 10 லட்சம் கிலோவை எட்டும். இந்த மருந்துகளின் மொத்த மதிப்பு சுமார் 12,000 கோடி ரூபாயாகும்.

போதைப்பொருள் இல்லா இந்தியா என்ற பிரதமர் மோடியின் கனவை நனவாக்கும் வகையில், போதைப்பொருள் ஒழிப்புப் பிரச்சாரம் அதே வைராக்கியத்துடன் தீவிரமாகத் தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget