மேலும் அறிய

Parliament Session: வலுக்கும் எதிர்ப்பு.. நாடாளுமன்ற அலுவல்களில் இன்று கருப்பு உடையில் பங்கேற்ற எதிர்க்கட்சியினர்..

மணிப்பூர் விவகாரத்தில் விவாதத்தை அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கருப்பு உடை அணிந்து கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி தரப்பில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 5 நாட்களாக எதிர்க்கட்சிகள் அவையில் முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் தரப்பில் நாடாளுமன்றத்தில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் நேற்றைய தினம் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மணிப்பூர் விவகாரத்தில் விவாதத்தை அனுமதிக்காதது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதத்தை தொடங்காதது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) கருப்பு உடை அணிந்து கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் பங்கேற்றனர். 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முறறுகையிட்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநிலங்களவையில், பிரதமர் மோடி மணிப்பூர் விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தரப்பில் இந்தியா, இந்தியா என கோஷங்களை முழக்கமிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் மோடி, மோடி என முழக்கமிட்டனர். இதனால் மாநிலங்களவையும் பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், எதிர்க்கட்சியினர் அனைவரும் கருப்பு உடை அணிந்து, நாடாளுமன்ற  வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

நேற்றைய முன் தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற அலுவல்கள் முறைப்படி நடக்க எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என குறிப்பிட்டு மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்றைய தினம் மல்லிகார்ஜுன் கார்கே அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "ஒரு நாளில் எதிர்க்கட்சிகளை ஆங்கிலேய ஆட்சியாளர்களுடனும், தீவிரவாத குழுக்களுடனும் பிரதமர் ஒப்பிட்டு பேசுகிறார். அதே நாளில், மத்திய உள்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளிடமிருந்து சாதகமான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக உருக்கமாக கடிதம் எழுதுகிறார். நீண்ட காலமாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் இடைவெளி இருப்பது தெரியும். இப்போது ஆளுங்கட்சிக்குள்ளேயே இடைவெளி ஏற்பட்டிருப்பது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளை திக்கற்றவர்கள் என்று பிரதமர் கூறியிருப்பது அபத்தமானது மட்டும் இல்லை, துரதிர்ஷ்டவசமானதும் கூட. பிரதமர் அவைக்கு வந்து மணிப்பூர் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என நாங்கள் கேட்கிறோம். அப்படிச் செய்வது அவரின் மரியாதையை புண்படுத்தும் என்று பிரதமர் கருதுகிறார். நாட்டு மக்களிடம் எங்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வு உள்ளது. அதற்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ பாராளுமன்றத்தில் அரசின் அனுகுமுறைக்கு எதிராக தன்னிச்சையான உணர்வுடன் கடுதம் எழுதி இருக்கிறார் அமித்ஷா. எதிர்க்கட்சிகளின் இது போன்ற அணுகுமுறையை பல கூட்டத்தொடரில் சந்தித்துள்ளோம். எதிர்க்கட்சிகள் தரப்பில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என தினந்தோறும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஆனால் பிரதமர் அதனை நிராகரித்து வருகிறார். அப்படி விளக்கம் அளிப்பது கவுரத்திற்கு இழுக்காக கருதுகிறார். உணர்ச்சிகளை கடிதத்தில் கொண்டு வருவது எளிது. அவை அலுவல்கள் சீராக நடைபெற வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை எழுப்ப வாய்ப்பளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
Embed widget