மேலும் அறிய

Odisha Train Accident: 'கொஞ்சம் தண்ணி கொடுங்க..’ : மீட்பு பணியாளரிடம் கெஞ்சிய நபர்.. ஒடிஷா பிணவறையில் அதிர்ச்சி..

ரயில் விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட 35 வயது நபர், இறந்த உடல்களை தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள பிணவறையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) மாலை பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 1ம் தேதி இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில், யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த ஹவுரா அதிவிரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், அதே வழித்தடத்தில் வந்த சரக்கு ரயில் ஒன்று  மோதியதில் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக உருவெடுத்தது.

இந்தநிலையில், நேற்று ரயில் விபத்தில் 288 பேர் இறந்ததாக ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “ மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகள், பல்வேறு மாவட்ட கலெக்டர்களின் அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, பாலசோரில் ஏற்பட்ட உயிரிழப்பு 288 என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், இதுவரை 205 உடல்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார். 

பிணவறையில் உயிருடன் இருந்த நபர்: 

ஒடிசாவின் பாலசோரில் நடந்த கொடூரமான ரயில் விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட 35 வயது நபர், இறந்த உடல்களை தற்காலிகமாக வைத்திருந்த பிணவறையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை நடந்த ஹவுரா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு- ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயிலில் மூன்று  ரயில் விபத்துக்குள்ளானதில் ராபின் நையா என்ற 35 வயது நபர் மயக்கமடைந்துள்ளார். அப்போது, மீட்பு பணியில் இருந்த ஊழியர்கள் நையா இறந்துவிட்டதாக எண்ணி, பாலசோரில் உள்ள ஒரு பிணவறையில் போட்டுள்ளனர். பின்னர், பிணவறையில் பல்வேறு கணக்கான சடலங்கள் மத்தியில் நையா மூச்சு திணறிய நிலையில் கிடந்துள்ளார். 

இந்தசூழலில், அறைக்குள் குவிந்திருந்த சிதைந்த உடல்களை அகற்ற மீட்புப் பணியாளர்கள் அறைக்குள் நுழைந்தபோது, நையா அவர்களில் ஒருவரின் காலை பற்றிக்கொண்டு கெஞ்சியுள்ளார். அதில், நையா சிறிய முனகலுடன், “நான் உயிருடன் இருக்கிறேன். இன்னும் சாகவில்லை. தயவுசெய்து எனக்கு தண்ணீர் கொடுங்கள்” என கேட்டுள்ளார். 

இதைக்கேட்ட மீட்பு பணியாளர்கள் உடனடியாக அவருக்கு சிறிது தண்ணீர் கொடுத்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மீட்புப் படையினர் அவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள சர்நேகாலி கிராமத்தில் வசிக்கும் நையா, ரயில் விபத்தில் உயிர் பிழைத்தார், ஆனால் அவரது இரண்டு கால்களையும் இழந்தார். தற்போது, அவர் ஆபத்தான நிலையில் மேதினிபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கிராமத்தைச் சேர்ந்த மற்ற ஏழு நபர்களுடன், நையாவும் கோரமண்டல் எக்ஸ்பிரஸில் ஹவுராவிலிருந்து ஆந்திராவிற்கு வேலை தேடி வந்துள்ளார்.

நையாவுடன் பயணித்த ஆறு நண்பர்கள் குறித்த தகவல்கள் இன்னும் என்னவென்று தெரியவில்லை.

ஜூன் 2 நடந்த ரயில் விபத்து நையாவின் குடும்பத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவம். 2010 ஆம் ஆண்டு மேற்கு மிட்னாப்பூரில் 148 பேரைக் கொன்ற ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் ராபினின் மாமா உயிர் பிழைத்தார். ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு, எதிர் திசையில் இருந்து வந்த சரக்கு ரயில் மீது மோதியது.

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
Cooking Oil: சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
Kim Jong Un: ஏவுகணை உற்பத்தியை 2.5 மடங்கு உயர்த்த உத்தரவு; வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியால் பரபரப்பு
ஏவுகணை உற்பத்தியை 2.5 மடங்கு உயர்த்த உத்தரவு; வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியால் பரபரப்பு
Embed widget