மேலும் அறிய

Odisha Train Accident: சிகிச்சையில் இன்னும் பல பேர்.. 101 உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் - ஒடிஷா அரசு!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 101 பேர் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 101 பேர் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்த 55 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டது. இந்த ரயில் விபத்தால் 275 உயிர்கள் பறிபோனதோடு, 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று மாலை கிழக்கு மத்திய ரயில்வேயின் கோட்ட ரயில்வே மேலாளர் ரிங்கேஷ் ராய் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ இந்த கொடூர ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 101 உடல்கள் அடையாளம் காணப்பட முடியவில்லை. காயமடைந்த சுமார் 200க்கு மேற்பட்டோர் ஒடிசாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதை தொடர்ந்து, புவனேஸ்வர் மாநகராட்சி ஆணையர் விஜய் அம்ரித் குலங்கே பேசுகையில், “ புவனேஸ்வரில் வைக்கப்பட்டுள்ள மொத்தம் 193 உடல்களில் 80 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 55 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட 1929 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு 200க்கு மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. இறந்த உடல்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்” என தெரிவித்தார். 

இந்தியா இதுவரை காணாத மிக மோசமான ரயில் விபத்தை கண்ட சில நாட்களுக்குப் பிறகு, ஒடிசா நிர்வாகம் ரயில் சேவைகளை மீண்டும் மீட்டெடுத்து வருகிறது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் 55 உடலை அடையாளம் கண்டுள்ளோம். இருப்பினும், பல உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாததால், இறந்த உடல்களை அடையாளம் காண்பதில் ஒடிசா நிர்வாகம் சிரமங்களை எதிர்கொள்கிறது என்று ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் தெரிவித்தார்.

என்ன தண்டனை..?

ஒடிசா ரயில் விபத்து காரணமானவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், 337, 338, 304A (ஜாமீனில் வெளிவர முடியாதது) மற்றும் 34 (அலட்சியத்தால் ஏற்படும் மரணங்கள்) ஆகிய பிரிவுகளின் கீழும் ரயில்வே சட்டம் 153, 154 மற்றும் 175 (பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பது) ஆகிய பிரிவுகள் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

275 பேரின் உயிரை எடுத்துக்கொண்ட ரயில் விபத்து: 

கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மாலை நடந்த கோர விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்திருப்பதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைவதற்கு காரணமான இந்த விபத்தானது 21ம் நூற்றாண்டில் இந்திய ரயில்வே வரலாற்றில் மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது.

விபத்து எப்படி நடந்தது, அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் பல்வேறு நபர்களால் தெரிவிக்கப்பட்டாலும், சிக்னல் கொடுப்பதில் ஏற்பட்ட குறைபாடு, அதி வேகமாக ரயில்கள் இயக்கப்பட்டதே ரயில் விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது. இருப்பினும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரயில்வே நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Top 10 News Headlines: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget