Narendra Modi: மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன்.. நார்வே பேப்பருக்கு குவியும் கண்டனம்!
ஆஃப்டன்போஸ்டன் இதழில் வெளியான அந்த கேலிச்சித்திரத்தில் அவர் மகுடி வாசிப்பவராக இருக்க, பாம்பு இருக்கும் இடத்தில் எரிபொருள் நிலையக் குழாய் போலத் தோற்றமளிக்கும் ஒன்று இருப்பது போலவும் வரையப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை பாம்பு பிடிப்பவராக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்ட நார்வே நாட்டின் செய்தித்தாள் ஒன்று கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் ஐரோப்பிய நாடான நார்வேக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது தலைநகர் ஓஸ்லோவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நார்வே பிரதமர் ஜோனாஸ் உடன், பிரதமர் மோடியும் பங்கேற்றிருந்தார். அப்போது பிரதமர் மோடியிடம் ஒரு பெண் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு அவர் பதிலளிக்காமல் சென்று விட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. பெண் நிருபர் ஹெல்லே லிங் இதுதொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
Jeg hadde fruktbare samtaler med statsminister Jonas Gahr Støre i Oslo. Et av de viktigste høydepunktene var oppgraderingen av vårt bilaterale partnerskap til et grønt strategisk partnerskap, som vil styrke samarbeidet innen ren energi, bærekraftig vekst, den blå økonomien og… pic.twitter.com/MNslB1hMmi
— Narendra Modi (@narendramodi) May 19, 2026
இது மிகப்பெரிய அளவில் வைரலானது. பலரும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் பிரதமர் மோடி ஆதரவாளர்கள் அந்த பெண் நிருபரை வெளிநாட்டு உளவாளி எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். இப்படியான நிலையில் பிரதமர் நரேந்திர மோடியைப் பாம்பாட்டியாகச் சித்தரிக்கும் இனவெறி கேலிச்சித்திரம் ஒன்றை நார்வே நாளிதழ ஒன்று வெளியிட்டுள்ளது. இது மேற்கத்தியப் பழமைவாதக் கருத்துக்களை வலுப்படுத்துவதாக உள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆஃப்டன்போஸ்டன் இதழில் வெளியான அந்த கேலிச்சித்திரத்தில் அவர் மகுடி வாசிப்பவராக இருக்க, பாம்பு இருக்கும் இடத்தில் எரிபொருள் நிலையக் குழாய் போலத் தோற்றமளிக்கும் ஒன்று இருப்பது போலவும் வரையப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு தந்திரமான மற்றும் சற்றே எரிச்சலூட்டும் மனிதன் என்ற கேப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்த இந்திய மக்கள் சம்பந்தப்பட்ட நாளிதழுக்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த கேலிச்சித்திரம் அப்பட்டமான இனவெறி கொண்டது எனவும், இந்தியாவிற்கும் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கும் அவமரியாதையானதாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் முன்பு உலகம் இந்தியாவை 'பாம்பாட்டியர்களின் தேசம்' என்று நினைத்ததாக பிரதமர் மோடி பேசி வந்தார். ஆனால் இப்போது, அவர் ஓஸ்லோ சென்றிருந்தபோது, ஒரு முக்கிய ஐரோப்பிய செய்தித்தாள் அவரை அப்படியே சித்தரித்துள்ளது எனவும் ஒரு இணையவாசி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான செய்திகளில் ஒரு ஸ்பெயின் செய்தித்தாள் பாம்பாட்டி குறியீட்டைப் பயன்படுத்தியபோது , இதேபோன்ற ஒரு எதிர்ப்பு எழுந்திருந்தது.
இதனிடையே பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் பதிலளிக்காமல் சென்ற சர்ச்சைக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செயலாளர் சிபி ஜார்ஜ், அறியாமை கொண்ட இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் வெளியிடப்படும் செய்திகளை படித்து விட்டு வந்து கேள்விகளை செய்தியாளர்கள் கேட்கிறார்கள். இந்தியாவைப் பற்றி மக்களுக்கு எந்தப் புரிதலும் இல்லை. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதாகவும், அதில் மீறல்கள் ஏற்படும் சமயங்களில் சட்டரீதியான தீர்வுகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















