மேலும் அறிய

North Indian Workers: வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்; தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்காக வந்த பீகார் அதிகாரிகள்

தமிழ்நாட்டில் உள்ள பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து பீகார் மாநில அதிகாரிகள் 2 பேர் தமிழ்நாடு வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வந்துள்ள பீகார் அதிகாரிகள்:

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்த பீகார் மாநிலத்தில் இருந்து பீகார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் உள்பட 2 அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமாநில பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சம்பந்தமில்லாத, பொய்யான வீடியோக்களை பதிவிட்டு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ்நாடு டிஜிபி விளக்கம்:

இதனை குறிப்பிட்டு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, அந்த வீடியோ தவறானது என்றும், வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, பத்திரிகையாளர் தான் பதிவிட்டு இருந்த வீடியோவை நீக்கிவிட்டார்.

இருப்பினும், இந்த வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ட்வீட் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் பீகார் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக செய்திகளில் வெளியாகியிருந்ததைப் பார்த்து தெரிந்துகொண்டேன் என்ரும் தமிழ்நாடு காவல்துறையினரிடம் பேசி பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன் எனவும் கூறியிருந்தார்.

பொய் செய்திகள் பரப்பியவர் மீது வழக்கு:

இதற்கிடையே, வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(ix(b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 505(ii)(b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிருவனங்கள் தொடங்கி ஹோட்டல்கள் வரை அடிமட்ட கூலி வேலைக்கு வடமாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். குறிப்பாக திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.

திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளில் தமிழர்களை விட வடமாநில தொழிலாளர்கள் தான் அதிகம் பணிபுரிகின்றனர். திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதனை திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்தது. மேலும், வடமாநில தொழிலாளர்களின் புகார்களைக் களைய தனிப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: புயல் வாய்ப்பு, கனமழை எச்சரிக்கை..சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: புயல் வாய்ப்பு, கனமழை எச்சரிக்கை..சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
தமிழகத்தில் 41 தொகுதிகளை பாஜக குறி வச்சுட்டாங்க.!அலறும் செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் 41 தொகுதிகளை பாஜக குறி வச்சுட்டாங்க.!அலறும் செல்வப்பெருந்தகை
TNPSC Group 2 Vacancy: அடிதூள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலியிடங்களை உயர்த்தி அறிவிப்பு- எவ்ளோ தெரியுமா?
TNPSC Group 2 Vacancy: அடிதூள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலியிடங்களை உயர்த்தி அறிவிப்பு- எவ்ளோ தெரியுமா?
Shashi Tharoor Vs Congress: பாஜகவுக்கு தாவும் சசி தரூர்.? மோடிக்கு ஒரே புகழாரம்.. காங்கிரசுக்குள் புகைச்சல்
பாஜகவுக்கு தாவும் சசி தரூர்.? மோடிக்கு ஒரே புகழாரம்.. காங்கிரசுக்குள் புகைச்சல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்
Vaithiyalingam joins ADMK| ”வாங்க வைத்திலிங்கம்”EPS கொடுத்த அசைன்மெண்ட்அதிமுகவின் டெல்டா கணக்கு
மிரட்டி சாதித்த நிதிஷ்! பாஜக ப்ளான் FLOP! அடுத்த முதல்வர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: புயல் வாய்ப்பு, கனமழை எச்சரிக்கை..சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: புயல் வாய்ப்பு, கனமழை எச்சரிக்கை..சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
தமிழகத்தில் 41 தொகுதிகளை பாஜக குறி வச்சுட்டாங்க.!அலறும் செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் 41 தொகுதிகளை பாஜக குறி வச்சுட்டாங்க.!அலறும் செல்வப்பெருந்தகை
TNPSC Group 2 Vacancy: அடிதூள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலியிடங்களை உயர்த்தி அறிவிப்பு- எவ்ளோ தெரியுமா?
TNPSC Group 2 Vacancy: அடிதூள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலியிடங்களை உயர்த்தி அறிவிப்பு- எவ்ளோ தெரியுமா?
Shashi Tharoor Vs Congress: பாஜகவுக்கு தாவும் சசி தரூர்.? மோடிக்கு ஒரே புகழாரம்.. காங்கிரசுக்குள் புகைச்சல்
பாஜகவுக்கு தாவும் சசி தரூர்.? மோடிக்கு ஒரே புகழாரம்.. காங்கிரசுக்குள் புகைச்சல்
Gaza Peace Plan: ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டம்; தீர்மானத்தை அங்கீகரித்த ஐ.நா பாதுகாப்பு சபை; நராகரித்த ஹமாஸ்
ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டம்; தீர்மானத்தை அங்கீகரித்த ஐ.நா பாதுகாப்பு சபை; நராகரித்த ஹமாஸ்
பனங்கற்கண்டு, வெல்லம் நல்லதா? பேலியோவில் இனிப்புக்கு ஏன் தடை? மருத்துவர் விளக்கம்!
பனங்கற்கண்டு, வெல்லம் நல்லதா? பேலியோவில் இனிப்புக்கு ஏன் தடை? மருத்துவர் விளக்கம்!
TVK Vijay : ‘விஜயுடன் மீண்டும், மீண்டும் பேசினாரா ராகுல்?’ நடந்தது என்ன..?
‘விஜயுடன் மீண்டும், மீண்டும் பேசினாரா ராகுல்?’ நடந்தது என்ன..?
சென்னையில் வேலை; விண்ணப்பிக்க அரசு அழைப்பு- என்ன தகுதி? எவ்வளவு சம்பளம்?
சென்னையில் வேலை; விண்ணப்பிக்க அரசு அழைப்பு- என்ன தகுதி? எவ்வளவு சம்பளம்?
Embed widget